Tuesday 3 March 2020

விளையாட்டு ஏன் குழந்தைகளுக்கு முக்கியமானது?


இயற்கையாக குழந்தைகளின் மூளையை விருத்தி செய்யும் சிறந்த சாதனம் விளையாட்டே ஆகும். தன்னுடைய மூளைக்கு  எது தேவையோ அதனை குழந்தைகள் விளையாட்டின் மூலமே கற்றுக் கொள்கின்றது.

 இதனால்தான் விஞ்ஞானி  ஐன்ஸ்ட்டின் கூறினார் ''விளையாட்டுத்தான் இருப்பதிலேயே சிறந்த ஆராய்ச்சி'' என்று.


சில காலங்களுக்கு முன்னால் அமெரிக்க நாசா நிறுவனத்தின் உப கம்பனி ஒன்று, தனது மூத்த பொறியியலாளர்கள் கணிசமான தொகையினர் ஒய்வு பெற இளம் பொறியியலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டி இருந்தது. அதன் பிறகு  உள்ள மூன்று வருடங்களில் எந்த ஒரு கண்டுபிடிப்புகளும் நடைபெறவில்லை. புது ரொக்கெட்டுக்கள் அனுப்பப்படவும் இல்லை. இதற்கான காரணத்தை ஆராய ஒரு உளவியலாளர் வயதான மற்றும் இளமையான பொறியியலாளர்களின் சிறுவயது விளையாட்டு அனுபவங்களை திரட்டி ஒரு ஆராய்ச்சி செய்தார். அந்த ஆராய்ச்சியிலிருந்து அவர் வழங்கிய முடிவு என்னவென்றால்

மூத்த பொறியியலாளர்கள் மண் விளையாடியவர்கள். மரம் ஏறியவர்கள். சின்ன சின்ன பொருட்களை வைத்து விளையாட்டு பொருட்கள் செய்தவர்கள். ஆனால்  இளம் பொறியியலாளர்கள் அவ்வாறல்ல. அவர்கள் புத்தகங்கள்  மற்றும் online மூலம் கற்றுப்  பழகியவர்கள். பொருட்களை வைத்து வித்தியாசமாக உருவாக்கியவர்கள் கிடையாது. 

எனவே  மூளை விருத்தியாக வேண்டும் என்றால்  நாம் கைகளை பயன்படுத்த வேண்டும். கைகள் மூலம் வேலை செய்யும் போது அதனை மூளை நன்றாக புரிந்துக்கொள்கின்றது.


விளையாட்டு என்பது
  1. உடல் ரீதியான ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.
  2. சுயசிந்தனையை வளர்த்தும்
  3. மற்றவர்களுக்கு இணங்கி நடக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும்.
  4. தோல்வியையும் வெற்றியையும் ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தும்.
  5. நரம்பெண்களை தூண்டிவிட்டு மூளை விருத்தியில் உதவும்

www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 3rd of March 2020.

No comments:

Post a Comment