Monday, 17 February 2020

எவ்வாறு குழந்தைகளுக்கு கணிதத்தை ஒரு மொழியாக கற்றுக் கொடுக்கலாம்?


பெற்றோர்களை பொறுத்த வரையில், குழந்தைகளுக்கு பிறப்பிலிருந்து ஒரு மொழியை கற்றுக் கொடுப்பதில் கொடுக்கும் சிரத்தையை கணிதத்தை கற்றுக் கொடுப்பதில் எடுப்பதில்லை. காரணம் குழந்தை பருவத்தில் அவர்களால் கணிதத்தை கற்க முடியாது என்ற தப்பெண்ணமே. உண்மை அதுவல்ல. ஏனைய மொழிகளை போல கணிதத்தின் மொழியையும் குழந்தைகளால் சிறு வயதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.

எண்களை மற்றும் கணித திறனை குழந்தைகள் ஒரு வயதில் இருந்தே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றார்கள் என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள்.



குழந்தைகள் மனிதர்களை அவதானிப்பதன் மூலமும் தொடர்பாடல் கொள்வதன் மூலமும் ஒரு மொழியை கற்றுக்கொள்கின்றார்கள். அதே நேரத்தில் தனது சூழலுடன் தொடர்பு வைப்பதன் மூலம் கணித மொழியை கற்றுக்கொள்கின்றனர். மொழி என்பது ஒருவருடன் தொடர்பாடல் கொள்ள அவசியம். ஆனால் கணிதம் உலகை அறிய அவசியம். 

முன் பள்ளி காலத்தில்   கணித மொழியின் அடிப்படை பற்றிய தன்னம்பிக்கையை குழந்தைகளுக்கு விதைக்கும் போது பிற்காலங்களில்  கணிதம் பற்றிய பயம் உருவாகுவதை குறைக்க முடியும் என ஆராய்ச்சிகள் முன் மொழிகின்றன.



எவ்வாறு குழந்தை ஒரு மொழியாக கணிதத்தை கற்றுக்கொள்கின்றது?


பின்வரும் ஐந்து படிமுறையினூடாக குழந்தை கணிதத்தை கற்றுக் கொள்கின்றது என பிரபல Education consultant Dr Hari Krishna கூறுகின்றார். 

படி 1

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயரை தொடர்பு படுத்துவது போல பொருட்களை இலக்கத்துடன் தொடர்புபடுத்தல். 

படி 2
ஒவ்வொரு இலக்கத்துக்கும் ஒன்று இரண்டு மூன்று என பெயர் இருக்கின்றது அது ஒரு மாறாத தொடர்ச்சியாக உள்ளது.( There is sequence to names)

படி 3
இலக்கமாக பெயர் சூட்டப்பட்ட எண்ணிக்கை பொருட்களின் எண்ணிக்கைக்கு சமானம்.

படி 4
பொருட்களின் இலக்க ஒழுங்கு மாற்றப்பட்டாலும் இருக்கக்கூடிய பொருட்களின் எண்ணிக்கை மாறாது.

படி 5
வித்தியாசமான பொருட்கள் இருந்தாலும் அவற்றை ஒரு பொருட் கூட்டமாக எண்ணப்பட முடியும்.



குழந்தைகளுக்கு கணித மொழியை கற்பிக்கும் போது இந்த 5 படிகளையும் கருத்திற்கொண்டு கற்பிக்க வேண்டும். இதில் ஒரு படியையாவது விட்டுச் செல்வது என்பது கணிதத்தை கற்பதில் குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்படலாம்.


www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 18th of February 2020.

Friday, 14 February 2020

குழந்தைகளுக்கு எழுத்துத்திறனை எவ்வாறு மேம்படுத்தலாம்?


ஒரு குழந்தை ஆக்கப்பூர்வமாக எழுத வேண்டும் என்றால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும்  தயாராக வேண்டும்.


உடல் ரீதியாக எழுதுவதற்கு தயாராகுதல் என்றால் என்ன?

ஒரு குழந்தையின் எழுத்து திறன் என்பது ஒரு விடயத்தை சிந்தித்து புரிதலுடன் எழுதுதலாகும்.  முதலில் ஒரு  எழுத்தை அது எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதனை கவனித்தல்  வேண்டும். பின் அது இயக்க தசைகளினூடாக கை  விரல்களினால் எழுதப்படல் வேண்டும். அதேநேரத்தில் அந்த எழுத்துக்கான ஒலி சேர்க்கப்படல் வேண்டும். இவை அனைத்தும் குழந்தைகளுக்கு விருத்தி அடைய குறைந்தது ஏழு வயது வரையாவது காத்திருக்க வேண்டும் என்பது உளவியலாளர்களின் கருத்து.



இவைகள் விருத்தி அடைய முன்னால் குழந்தைகளை எழுதுமாறு வற்புறுத்தும் போது இயக்க தசைகளின் போதிய விருத்தி இன்மையினால் அவர்கள் கை  வலியை  உணர்வார்கள்.

சில குழந்தைகள் சிறு வயதிலேயே பேனை பென்சிலை பிடித்து கிறுக்குவதை அவதானித்து உள்ளோம். இது அந்த குழந்தை எழுதுவதற்கு ஆயத்தமாகியுள்ளது என்று அர்த்தமல்ல. அது பெரியோர்கள் செய்வதை பார்த்து அந்த பொருளுடனான அவர்களது ஆராய்ச்சியுடன் கலந்த விளையாட்டாகும்.

கைகளை பிடித்து குழந்தைகள் எழுத வேண்டும் என்றால் முதலில் அதற்கான விரல் தசைகள் விருத்தியடைய வேண்டும்.

விரல் தசைகள் விருத்தி அடைவதற்காக குழந்தைகளுக்கான அடிப்படை பயிற்சிகள் பின்வருமாறு

மணிக்கட்டு கட்டுப்பாட்டுக்கான பயிற்சி (Wrist Control)


  • கத்தரியினால் வெட்டுதல் 
  • கடதாசியை மற்றும் புடவைகளை  மடித்தல்
  • போத்தலில் தண்ணீர் நிரப்புதல்
விரல் தசை விருத்திற்கான பயிற்சி

  • மணி கோர்க்க விடுதல்
  • பட்டன் போட விடுதல்
  • Shoe lace கட்ட விடுதல்
மூளையின் இரு பகுதிகளையும் நேர் எதிராகவும் ஒரே திசையிலும் தொழிற்பட விடுதல்

  • ஈர துணியை எதிர் எதிராக புளிய விடுதல்.
  • பாயை இரண்டு கையாளும் மடிக்க விடுதல்


குழந்தைகளுக்கு எழுத்துக்களை எவ்வாறு சொல்லிக் கொடுக்கலாம்?

உளவியலாளர்களின் கருத்துப்படி நேரடியாக கொப்பியையும் பேனாவையையும் கொடுத்து குழந்தைகளை எழுத வைப்பது ஆரோக்கியமான விடயமல்ல. மாறாக படிப்படியாக வித்தியாசமான texture யினூடாக எழுத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் போது அது குழந்தைகளின் மனதில் இலகுவாக பதிந்துவிடுகின்றது.

உதாரணமாக கைகளால் அசைத்து காற்றில் எழுத சொல்லிக் கொடுதல் (Air Writing). இதன்போது அதனை பாட்டாகவோ நடனமாகவோ மாற்றி கற்பிக்கும் போது குழந்தைகள் சுவாரஷ்யமாக கற்றுக்கொள்வார்கள். 

அதே நேரத்தில் ஒரு எழுத்தை சொல்லிக்கொடுக்கும் போது இரு பக்க  கால் கை பயன்படுத்தும் போது மூளையின் இரு பகுதிகளையும் பயன்படுத்த வாய்ப்பை வழங்குகின்றோம். உதாரணமாக வலது பக்க கையையும் இடது பக்க காலையையும் பயன்படுத்தல்.

பின்னர் இதனை Water Writing ஆக மாற்றல். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து கைகளால் எழுத்தை எழுத விடுதல்.

பின் மணலில் தண்ணீரை கலந்து அதில் எழுத விடுதல். ஒரு தட்டையை வெயிலில் வைத்து மெதுவான சூட்டில் எழுத விடுதல். துணிகளை அட்டையில் ஒட்டி அதில் எழுத விடுதல்.

இறுதியாக சீமெந்து தரையில் எழுத விட்டதன் பிற்பாடு கடதாசியை கொடுத்து எழுதவிடும் போது குழந்தை நன்றாக எழுத ஆரம்பிக்கும். கடதாசியில்  crayon ஆல் பின் பென்சிலால் எழுத விடுதல்.


இது குழந்தைகளின் கைகளுக்கு வித்தியாசமான உணர்வுகளை வழங்கி எழுத்தை இலகுவாக எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கும்.  

மனரீதியாக குழந்தைகளை எழுதுவதற்கு தயார் படுத்தல் என்றால் என்ன?


  • படிப்பதற்கான அமைதியான சூழலை உருவாக்குதல்.
  • சுவரை பார்த்தப்படி உட்காரவைத்தல்.
  • எழுதும் போது அடிக்கடி பாராட்டுதல்.
  • முழு பக்கத்தையும் ஒரே தடவையில் எழுதவிடாமல் இடை  இடையே இடைவெளி விட்டு மூளைக்கு ஓய்வு கொடுத்தல். இவ் இடைவெளியில் சின்ன சின்ன விளையாட்டுக்களை வழங்கல்.

    www.drsanoosiya.blogspot.com
    By ART OF PARENTING at 14th of February 2020.


Monday, 10 February 2020

உங்கள் குழந்தை கதைப்பதற்கு தாமதமாகின்றதா?


குழந்தைகள் பேச வேண்டும் என்றால் பேச்சை கேற்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருத்தல் வேண்டும். பேசுவதற்கான ஊக்குவிப்பு (speech stimulation) இன்மையே இன்றைய அநேகமான குழந்தைகளின் பேச்சு தாமதமாக்குவதற்கு பிரதான காரணமாக உள்ளது.



குழந்தைகளின் பேச்சு விருத்தி
  •  10 மாத குழந்தை  ‘’அம்மா’’ ‘’மம்மா’’ ‘’தட்டா’’ போன்ற அர்த்தமில்லாத சில வார்த்தைகள் பேசும். (babbling).
  • 1 -1/2 வயது குழந்தைகள் கிட்டத்தட்ட 10 வார்த்தைகள் பேசுவார்கள்.
  • நாக்குக்குண்டான தசைகள் விருத்தி அடையும் போதே பேச்சு தெளிவாகும்.
  • குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் போது முதலில் தெளிவின்மை அதாவது மழலை தன்மை இருக்கும்.
  • பொதுவாக பெண் குழந்தைகள் 5 1/2 வயது வரை அவர்களது பேச்சில் தெளிவின்மை இருக்கும். ஆனால் நிறைய விஷயங்களை பேசுவார்கள்.
  • ஆண் குழந்தைகளை பொறுத்த வரையில் வார்த்தைகளை குறைவாக பயன்படுத்துவார்கள். தெளிவாக கோர்வையாக பேசுவதற்கு 7 1/2 வயது வரை கூட தாமதிக்கலாம் என்பது  சில உளவியலாளர்களின்  கருத்து.

குழந்தைகளின் பேச்சுத் திறனை பாதிக்கும் நோயியல் காரணிகள் பின்வருமாறு

  1. கேள்விப் புலன் குறைபாடு
  2. Tongue Tie எனப்படும் நாக்கில் ஏற்படும் இயலாமை
  3. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையாக இருக்கலாம்
  4. Autism  மற்றும் Hyperactivity போன்ற disorder ஆக இருக்கலாம்

ஆனால் இன்றைய நவீன உலகை பொறுத்தவரையில் குழந்தைகளுக்கு பேச்சுக்கான ஊக்குவிப்பு (speech stimulation) குறைந்து செல்வதே பேச்சு தாமதமாக்குவதற்கு  பிரதான காரணமாக உள்ளது  


முன்னைய காலங்களில் வீடுகளில் அதிகமான நபர்கள் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். இதனால் குழந்தைகள் பேச்சை தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தது. இன்று அவ்வாறான சூழல் நமது வீடுகளில் இல்லை.

மற்றும் Gadget பாவனை குழந்தைகள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் இன்றைய காலத்தில் அதிகம் என்பதனால் அதிகம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இடையிலான நேரடி கதை தொடர்பு அருகிச்செல்கின்றது.

கைகளுக்கும்  கண்ணிற்கும்  வார்த்தைக்கும் இருக்கக் கூடிய  தொடர்பு பேச்சு வளர்ச்சியில்  முக்கியமானது. நாம் சொல்லும் விடயத்தை குழந்தை சைகைகளிலே புரிந்து கொண்டால் அவர்களுக்கு பேச வேண்டும் என்ற தேவை வராது. குறைந்த பட்ச செயலினூடாக எமக்கும் குழந்தைகளுக்கும் உள்ள தொடர்பு இருக்குமேயானால் அவர்களுக்கு பேச வேண்டிய அவசியம் வராது.

அதனால்தான் குழந்தைகளுக்கு பேச்சு வரவில்லை என்றால் சந்தைக்கு கூட்டிச்செல்லுங்கள் என்று எமது முன்னோர்கள் கூறியுள்ளனர். காரணம் அங்கு  நிறைய வார்த்தைகளை கேட்பதனால் குழந்தைகள் பேசுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.



குழந்தைகள் பேசுவதற்கான வயதெல்லை தாமதமாகும் போது பெற்றோர்களாகிய நமது பொறுப்பு என்ன?
  • Gadget பாவனையைகுழந்தைகளுக்கு இயன்றளவு குறைத்து நிறைய வார்த்தைகளை கேட்பதற்கான வாய்ப்பை வழங்கல்.

உதாரணமாக கடைகளுக்கு கூட்டிச்செல்லும் போது அது சம்பந்தமாக கதைத்துக் கொண்டு செல்லல். இங்கு குழந்தை உடனே பதில் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வார்த்தைகளை குழந்தை மூளையில் பதிவதற்கான வாய்ப்பை வழங்குவதே முக்கியமானது.
  • ஒருவிடயத்தை குழந்தையுடன் பகிரும் போது அதை ஒரு வார்த்தையுடன் முடித்து விடாமல் அதனை அதனை விளையாட்டு மைதானத்தில் Running commentary வழங்கப்படுவது  போல வழங்குதல் .

உதாரணமாக குழந்தைக்கு தக்காளியை அறிமுகப்படுத்தும் போது  ''அம்மாவை பார், நான் தக்காளி வாங்கி வந்தேன். இது சிவப்பு நிறம். இதை தண்ணீரில் கழுவுவோம். ஓ!! தண்ணீர் சில்லன்று இருக்கின்றது.'' என்றவாறு

மாறாக இது தக்காளி இதை அவ்வாறு சொன்னால் தான் நான் உனக்கு தருவேன் என வார்த்தைகளை சொல்லும் படி வற்புறுத்தும் போது குழந்தை பேசுவதையே நிறுத்திவிடும்.



By ART OF PARENTING at 10th of February 2020.


Thursday, 6 February 2020

குழந்தைகளுக்கு வாசிப்புத்திறனை பிறப்பிலிருந்து மேம்படுத்தல் எவ்வாறு?


குழந்தைகள் வாசிப்பதற்காக மூளையின் பல பகுதிகளை பயன்படுத்துகின்றனர். அப்பகுதிகள் குழந்தை பருவத்தில் சரியான விதத்தில் தூண்டப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் சிறந்த வாசிப்பாளிகளை உருவாக்க முடியும்.


குழந்தைகளுக்கு வாசிப்பு திறனை அறிமுகப்படுத்தமுன் விருத்தி செய்ய வேண்டிய மூன்று  திறன்கள் பின்வருமாறு

  1. புலன்களின்  விருத்தியை தூண்டுதல்
  2. தசைகளுக்குண்டான விருத்தியை தூண்டுதல்    
  3. மூளையில்  வித்தியாசத்திற்கும் ஒற்றுமைக்கும் இடையிலான  விருத்தியை ஏற்படுத்தல் 

புலன்களின்  விருத்தியை தூண்டுதல்

குழந்தை பருவத்தில் பார்வை, கேட்டல்,தொடுகை ,நுகர்ச்சி ,மற்றும் சுவை புலன்களை சரியான விதத்தில் தூண்டுவதன் மூலம் அவர்களது வாசிப்புத்திறன் பிற்காலத்தில் மெருகூட்டப் படுகின்றன என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

மூளையானது குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொரு வயதிலும் குறிப்பிட்ட புலன்களை வைத்து தனது நரம்பெண்களை விருத்தி செய்து கொள்கின்றது. இந்த விருத்தியானது பிற்காலத்தில் மொழி கற்றலுக்கான  அடிப்படையாக அமைகின்றது.

  • முதல் ஆறு மாதங்களில் குழந்தைகள் அதிகம் நாக்கையும் பின்னர் கைகளையும் பயன்படுத்துவார்கள். எனவே இந்த வயதில் குழந்தைகளுக்கு கைகளுக்கும் வாய்க்கும் நிறைய அனுபவம் கொடுக்க வேண்டும்.

  • பின்னர் பொருள்களை பிடித்து தட்டிப்பார்த்தல் அதன் மூலம் தாளத்தை உருவாக்கல் போன்ற விடயங்களில் ஈடுபடுவார்கள். Ex கரண்டியை பிடித்து மேசையில் அடித்தல்.

  • அதே போல மூளையில் மண நுகர்ச்சி கலங்களை தூண்டுவதற்காக  பல்வேறுபட்ட மணங்களை நுகர்வதற்கான வாய்ப்பை வழங்க  வேண்டும். Ex எலுமிச்சை பழம்  நுகர விடுதல்.

  • குழந்தை துப்பும் பழக்கத்தை விருத்தி செய்வதற்கு முன்னாள் (ஒன்பது மாதத்திற்கு முன்னாள்) எல்லா வகையான சுவையையும் அனுபவிக்க வாய்ப்பளிக்க வேண்டும். 

  • மேலும் நிறைய நமது குரல் கேட்கும் வாய்ப்பை வழங்குவதன் மூலம்  மூளையின் கேட்டல் பகுதியை விருத்தி செய்ய முடியும். 

இவையே மொழிக் கற்றலுக்கான அடிப்படை பயிற்சியாகும்.



தசைகளுக்குண்டான விருத்தியை தூண்டுதல்

குழந்தையின் விருத்தியை நோக்கும் போது கைகால்களிலுள்ள பெரிய தசைகள் விருத்தி அடைந்த பிற்பாடே சிறிய தசைகளான கண்ணுக்குண்டான தசைகள் விருத்தி அடைகின்றன. கண் தசைகள் விருத்தி அடைந்த பிறகே குழந்தை வாசிப்புக்கு தயாராகின்றது. எனவே வாசிப்புத்திறனை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன் கை  கால்களை பயன்படுத்தி நன்றாக தவள வாய்ப்பளிக்க வேண்டும். 

தவளாத குழந்தைகளுக்கு வாசிப்புத்திறன் தாமதமாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் நிரூபிக்கின்றன


 மூளையில்  வித்தியாசத்திற்கும் ஒற்றுமைக்கும் இடையிலான  விருத்தியை ஏற்படுத்தல் 

 குழந்தையின் புலன் விருத்தியையும் தசைகளுக்குண்டான விருத்தியையும் மேம்படுத்திய பிற்பாடு சின்ன சின்ன சமையல் பொருட்கள் இலைகள் போன்றவற்றை வழங்கி அவற்றை வேறுபிரிப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். இதன்போது குழந்தைகள் ஒரே மாதிரி பொருட்களை ஒன்று சேர்த்தல் இலைகளில் கூட வித்தியாசத்தை உணர்தல் போன்ற அனுபவங்களை பெற்றுக் கொள்கின்றனர். இது மூளை யில்  வித்தியாசத்திற்கும் ஒற்றுமைக்கும் இடையிலான வேறுபாட்டை விருத்தி செய்கின்றது. இதன் மூலம் பிற்காலத்தில் குழந்தைகள் எழுத்துக்கு இடையிலான வித்தியாசத்தை இனங்கண்டு கொள்வார்கள்.

உதாரணமாக ''B'' யிற்கும் ''D'' இடையிலான வித்தியாசம் மற்றும் ''க'' யிற்கும் ''ச'' இடையிலான வித்தியாசம். 


By ART OF PARENTING at 6th of February 2020.
  


Saturday, 1 February 2020

குழந்தைகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்தல் அவசியமா?


குழந்தைகளின் மொழிக் கற்றலில் கவனித்து பேசும் திறன் எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவு வாசிப்புத் திறனும் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகளுக்கு வாசிப்புத்திறனை மேம்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

vமொழிக்கு உண்டான  சொற்களையும் அதற்கான ஒலிகளையும்  கற்றுக் கொள்கின்றதுஇதனால் எழுத்தறிவை (Litracy skill) வளர்கின்றது.
vபுத்தகங்களின் பெறுமதியை உணர்த்துகின்றது
vகற்பனை திறனை  வளர்கின்றது.
vசமூக வளர்ச்சியையும் தொடர்பாடல் திறனையும் வளர்கின்றது.
vஉண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்த்துகின்றது.


வாசிக்கும் திறனை அறிமுகப்படுத்துவதற்கான வயதெல்லை என்ன?

ஒவ்வொரு குழந்தைகளின் விருத்தியும் தனித்துவமானது. அதே போல குழந்தைகள் வாசிக்க கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் வயதெல்லையும் ஆளுக்காள் வேறுபடும்.

பொதுவாக மூன்று வயதில் குழந்தைகள் கதைகள் கேட்டு அதனை தொடர்ந்து கேட்கும்போது அவர்களுடைய மழலை மொழியில் அதனை திரும்பிச் சொல்வதற்கு  இயலுமானவர்களாக இருப்பார்கள். கண்ணுக்கெட்டிய தூரத்தில் புத்தகங்கள் தென்படும் போது அவற்றை புரட்டிப் பார்த்து ஆராய்ச்சி செய்வார்கள்.

நான்கு வயதை எட்டிய குழந்தைகள் மிகவும் பரீட்சியமான எழுத்துக்களை  இனங்கண்டு கொள்வார்கள்.உதாரணமாக தனது பெயர், காட்சி பலகைகளிலுள்ள சொற்கள் மற்றும் பொருட்களின் லேபெல்கள் போன்றவைகளை இனங்காண்வார்கள்.

ஏறத்தாள ஐந்து வயதில் எளிமையான சொற்களை வாசிக்கக் கூடியவர்களாகவும் சிலவேளை அவற்றை எழுதக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். 



குழந்தைகள் வாசிப்பதற்காக மூளையின் பல பகுதிகளை பயன்படுத்துகின்றனர்அப்பகுதிகள் குழந்தை பருவத்தில் சரியான விதத்தில் தூண்டபடுவதன் மூலமே எதிர்காலத்தில் சிறந்த வாசிப்பாளிகளை உருவாக்க முடியும்.



By ART OF PARENTING at 2nd of February 2020.