Sunday, 15 March 2020

COVID-19 குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?


உலகை அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் COVID-19ஆல் எமக்கு ஏற்பட்ட உடலியல் தாக்கங்களைவிட மனரீதியான தாக்கங்களே அதிகமாக உள்ளது. இதனால் எமது கண்காணிப்பில் உள்ள குழந்தைகளும் மறைமுகமாக பாதிக்கப்படுவதை யாராலும் மறுக்க முடியாது.




COVID-19 போராட நாமும் தயார் என்பதற்கு நம்பிக்கையூட்டும் தகவல்கள்

  • மருத்துவ வளர்ச்சியின் உச்ச காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அதற்கான சான்றுகள் 

  1. நோய்க்கு  காரணமான வைரஸ் மற்றும் அதற்கான மரபணுத்தொடரும் வெகு விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது.
  2. நோய் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகளும் (Testing) விரைவில் உருவாக்கப்பட்டன.
  3. நோய்க்கான மருந்து மற்றும் தடுப்பு மருந்துகள் (Vaccine) கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் முன்னேற்றப்பாதையில் சென்றுக்கொண்டு உள்ளன.

  • China Whuhan மாநிலத்தில்தோற்றுவிக்கப்பட்ட இந்த நோயானது பாரிய அழிவை அந்நாட்டில் ஏற்படுத்தினாலும் அரசின் உடனடி நடவடிக்கைகளின் காரணமாக நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.நாளுக்குநாள் நோயினால் பாதிக்கப்பட்டோரின் தொகை குறைந்து கொண்டு செல்கின்றது
  • குழந்தைகள் தொற்றுக்குள்ளானது இதுவரை <3 சதவீதமாகவே உள்ளது அவர்களுக்கு ஏற்பட்ட வீரியத்தன்மையும் குறைவே.
  • WHOஆல் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு முறைகள் இலகுவில் எல்லோராலும் பின்பற்றக்கூடிய ஒன்றாக உள்ளது
  1.  அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ளுதல். 
  2. இருமல் தும்மலின்  போது முறையான பாதுகாப்பு முறைகளை பேணுதல். 
  3. தரைகளை சுத்தமாக வைத்திருத்தல். 

COVID-19 பற்றி குழந்தைகளுக்கு எவ்வாறு எடுத்துக்கூறலாம்?

  • வயதிற்கு ஏற்ற வகையில் நோய் பற்றிய சரியான தகவல்களை குழந்தைகளுக்கு வழங்கல்.

 Ex :- ''உலகில்  தடுமல் காய்ச்சல் போன்ற ஒரு வகையான வைரல் நோய்  பரவிக்கொண்டு உள்ளது. இந்த நோய்க்கு ஆளாகிய எத்தனையோ பேர் முறையான சிகிச்சை பெற்று பூரணமாக குணமாகியுள்ளனர். இந்த நோய் எமக்கு ஏற்பட்டால் எமக்கு உதவுவதற்கு வைத்தியர்களும் தாதியர்களும் தயாராக உள்ளனர்.''

  • இப்போது நாம் இந்த நோயிலிருந்து பாதுகாப்பாகவே உள்ளோம். அச்சப்பட தேவை இல்லை எனக் கூறுதல்.

  • சரியான தடுப்பு முறைகளை பயன்படுத்துவோமாயின் இந்நோயிலிருந்து எம்மை முற்றாக பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தல்.

www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 15th of March 2020.

Wednesday, 11 March 2020

வயதிற்கு ஏற்றவகையில் விளையாட்டை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது எவ்வாறு?


2-7 வயது

இந்த வயது குழந்தைகளுக்கு Rules பின்பற்ற தெரியாது. தோல்வி வெற்றி என்ன என்பதனை அறியமாட்டார்கள். 
குறிப்பாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் Luck & gambling சம்பந்தப்பட்ட விளையாட்டுக்களை புரிந்துகொள்ளமாட்டார்கள். உதாரணமாக Ludo & Snakes and ladder போன்ற விளையாட்டுக்களில் தோல்வியுறும் போது அது அதிஷ்டத்தால் ஏற்பட்டது என்பதனை புரிந்துகொள்ள மாட்டார்கள். இது நியாயமற்ற செயல் என்றே உணர்வார்கள்.

குழந்தைகள் எப்போதும் பெற்றோர்களை அவர்களின் சுற்றத்தார்களை  பிழை செய்யமாட்டார்கள் என்றே எண்ணுகின்றார்கள். இவ்வாறான விளையாட்டுக்களில் பெற்றோர்கள் அவர்களுடன் இணைந்து விளையாடும் போது பெற்றோர்கள் தன்னை ஏமாற்றுகின்றார்கள் என்ற யூகத்தை தோற்றுவிக்கும். 

கற்பனை விளையாட்டுக்கள் அவர்களிடம் நிறைய இருக்கும். எந்த அனுபவத்தை நிஜத்தில் பெறுகிறார்களோ அதனை விளையாட்டாக  மாற்றுவார்கள். உதாரணமாக குழந்தை காய்ச்சல் காரணமாக வைத்தியசாலை சென்றுவந்திருந்தால் டாக்டர் டாக்டர் விளையாட்டு விளையாடும். கிட்டத்தட்ட ஒரு கிழமை வரை இந்த விளையாட்டு நீடிக்கும். இதன் மூலம் உலகத்தில் பல விடயங்கள் நடைபெறுகின்றது எல்லாம் சாத்தியமானது என்பதனை புரிந்துகொள்கின்றனர்


8-12 வயது

இவர்களால் Rules பின்பற்ற முடியும். தனக்கு ஒரு வாய்ப்பு வரும். பின்னர் அந்த வாய்ப்பு இன்னொருவருக்கு செல்லும்.  இதன் மூலம் ஒரு சமயம் நாம் தோற்போம் இன்னொரு சமயம் வெல்லுவோம். தோற்கும் போது இன்னொரு வாய்ப்பை பெற்று அதனை வெற்றியாக மாற்ற முடியும் என்ற வாழ்க்கையின் முக்கியமான உண்மையை குழந்தைகள் புரிந்துகொள்கின்றனர். 

ஒரு விளையாட்டு சலிப்பு தட்டும் போது அதன் விதிமுறைகளை மாற்றி இன்னொரு விளையாட்டாக மாற்றி விளையாடுவர். இதன் மூலம் புதிய அனுபவங்களினூடாக கற்றுக்கொள்ள மூளை ஆயத்தமாகின்றது என அர்த்தமாகும்.



13 வயதிற்கு மேற்பட்டவர்கள்

இந்த வயது குழந்தைகளினது விளையாட்டு சமூகம் சார்ந்த விளையாட்டாக இருக்கும். இவர்கள் விளையாட்டுப் பொருட்கள் பயன்படுத்துவது குறைவு. சின்ன சின்ன குழுக்களாக இணைந்து பேச்சு விளையாட்டுக்களில் ஈடுபடுவார்கள். உதாரணமாக உலக பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு அதனை தீர்ப்பதற்கு முனைதல், மரம் நட்டுதல், அநீதிக்கு எதிராக போராடல் போன்றவை. அவர்களது கருத்துக்கள் சரியாக இருந்தால் அவர்களுக்கு உதவுவதில் தப்பில்லை.



www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 11th of March 2020

Saturday, 7 March 2020

உங்கள் குழந்தை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட மறுக்கின்றதா?


கூட்டுக்குடும்பங்கள் அரிதாக்கிக் கொண்டு  செல்வதும் பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதானாலும் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் வாய்ப்பை இன்றைய நவீன சிறுவர்கள் இழந்து விடுகின்றனர்.



குழந்தை சேர்ந்து விளையாட வேண்டும் என்றால் முதலில் சேர்ந்து விளையாடுவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும். இரண்டாவது விளையாட்டுக்கான நான்கு படிமுறைகளையும் குழந்தை தாண்டிச்செல்ல வேண்டும்.

விளையாட்டுக்கான நான்கு படிமுறைகள் என்ன?


Solitary Play

ஒரு குழந்தை புதிய நண்பர்களுடன் சேரும்போது  முதலில் தனிமையிலேயே தனக்கு பிடித்தமான பொருட்களுடன் விளையாடுவார்கள். இது மூன்று மாதங்கள் வரை நீடிக்கலாம். சரியான வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டால் ஆறு மாதங்கள் வரை நீடிக்க முடியும்.



Parallel Play

 இங்கு குழந்தைகள் ஒன்றாக உட்கார்ந்து தனியாக தங்களுடைய விளையாட்டை விளையாடுவார்கள். வெளியே இருந்து பார்க்கும் போது ஒன்றாக விளையாடுவது போல தோன்றும். ஆனால் நிஜம் அதுவல்ல. இது சில வாரம் தொடக்கம் ஒரு மாதம் வரை நீடிக்கலாம்.



Associated Play 

குழந்தைகளுக்கு இடையில் பொருட்கள் செயற்பாடுகள் பரிமாற்றம் நடைபெறும். இங்கும் சேர்ந்து விளையாட மாட்டார்கள். தனிமையில்தான் இருப்பார்கள்.



Co operative Play

இறுதியில் நிஜ விளையாட்டுக்குள் செல்வார்கள். தான் வாய்ப்பை பெற்றுக்கொள்ளல் மற்றவர்களுக்கு கொடுத்தல். விளையாட்டில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு அவை பின்பற்றப் படுதல் எல்லாம் நடைபெறும்.


சிறுவயதில்  தமது உறவுகளில் இந்த படிகளை தாண்டி விளையாட்டை முழுமையாக அனுபவிக்கும் குழந்தைகளே எதிர்காலத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் வேலைத்தளத்தில் சிறந்த உறவுகளை பேணுவத்துடன் பிரச்சினைகள் என்று வரும்போது அவற்றை சிறந்த முறையில் கையாளவும் ஆற்றல் பெறுகின்றனர்.

www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 7th of March 2020.

Tuesday, 3 March 2020

விளையாட்டு ஏன் குழந்தைகளுக்கு முக்கியமானது?


இயற்கையாக குழந்தைகளின் மூளையை விருத்தி செய்யும் சிறந்த சாதனம் விளையாட்டே ஆகும். தன்னுடைய மூளைக்கு  எது தேவையோ அதனை குழந்தைகள் விளையாட்டின் மூலமே கற்றுக் கொள்கின்றது.

 இதனால்தான் விஞ்ஞானி  ஐன்ஸ்ட்டின் கூறினார் ''விளையாட்டுத்தான் இருப்பதிலேயே சிறந்த ஆராய்ச்சி'' என்று.


சில காலங்களுக்கு முன்னால் அமெரிக்க நாசா நிறுவனத்தின் உப கம்பனி ஒன்று, தனது மூத்த பொறியியலாளர்கள் கணிசமான தொகையினர் ஒய்வு பெற இளம் பொறியியலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டி இருந்தது. அதன் பிறகு  உள்ள மூன்று வருடங்களில் எந்த ஒரு கண்டுபிடிப்புகளும் நடைபெறவில்லை. புது ரொக்கெட்டுக்கள் அனுப்பப்படவும் இல்லை. இதற்கான காரணத்தை ஆராய ஒரு உளவியலாளர் வயதான மற்றும் இளமையான பொறியியலாளர்களின் சிறுவயது விளையாட்டு அனுபவங்களை திரட்டி ஒரு ஆராய்ச்சி செய்தார். அந்த ஆராய்ச்சியிலிருந்து அவர் வழங்கிய முடிவு என்னவென்றால்

மூத்த பொறியியலாளர்கள் மண் விளையாடியவர்கள். மரம் ஏறியவர்கள். சின்ன சின்ன பொருட்களை வைத்து விளையாட்டு பொருட்கள் செய்தவர்கள். ஆனால்  இளம் பொறியியலாளர்கள் அவ்வாறல்ல. அவர்கள் புத்தகங்கள்  மற்றும் online மூலம் கற்றுப்  பழகியவர்கள். பொருட்களை வைத்து வித்தியாசமாக உருவாக்கியவர்கள் கிடையாது. 

எனவே  மூளை விருத்தியாக வேண்டும் என்றால்  நாம் கைகளை பயன்படுத்த வேண்டும். கைகள் மூலம் வேலை செய்யும் போது அதனை மூளை நன்றாக புரிந்துக்கொள்கின்றது.


விளையாட்டு என்பது
  1. உடல் ரீதியான ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.
  2. சுயசிந்தனையை வளர்த்தும்
  3. மற்றவர்களுக்கு இணங்கி நடக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும்.
  4. தோல்வியையும் வெற்றியையும் ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தும்.
  5. நரம்பெண்களை தூண்டிவிட்டு மூளை விருத்தியில் உதவும்

www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 3rd of March 2020.

Thursday, 27 February 2020

குழந்தைகளை பாதிக்கும் இலத்திரனியல் சாதனங்கள்


இன்றைய நவீன உலகில் குழந்தைகளை மனரீதியாக பாதிக்கும் நச்சுப் பொருட்கள் என பிரதானமாக ஐந்து வகையான நச்சுப்பொருட்களை உளவியலாளர்கள் முன்வைக்கின்றார்கள். அவையாவன

  1. கார்ட்டூன் 
  2. தொடர் நாடகங்கள்
  3. சினிமா 
  4. விளம்பரங்கள் 
  5. வீடியோ விளையாட்டுக்கள்



உடலில் புற்றுநோய் என்பது நம்மை அறியாமலே ஊடுருவிச் சென்று எம்மை அழித்து விடுவதுபோல இந்த ஐந்து வகையான நச்சுப்பொருட்களும் நம்மை அறியாமல் எமது சமுதாயத்தில் ஊடுருவி குழந்தைகளின் எதிர்காலத்தை அழித்துக்கொண்டு இருக்கின்றன.

தனித்தனியாக இந்த நச்சுப்பொருட்களை நோக்குவதற்கு முன்னால் பொதுவாக அதிக நேரம் குழந்தைகள் இலத்திரனியல் சாதனைகளை பயன்படுத்தும் போது ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதனை முதலில் பார்ப்போம்

  • குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

உதாரணமாக தொடர்ந்து கார்ட்டூன்களை பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளின் சிந்தனையை தூண்டும் மூளையின் பகுதி (Prefrontal cortex) வளராமல் சிறிதாக வாய்ப்பு அதிகம். தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேல் Cartoon பார்க்கும் குழந்தைகளின் சுயசிந்தனை பாதிப்படைந்து Problem solving போன்ற திறன்கள் இல்லாமலாகின்றன.

  • குறும் பார்வை குறைபாடு (Myopia or short sight)போன்ற கண் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
  • குறைவான உடற்பயிற்சி மற்றும் முறையற்ற உணவுப் பழக்கங்களுக்கு சிக்குண்டு Obesity போன்ற பிரச்சினைகளுக்கு சிறு வயதிலேயே ஆளாகின்றனர்.
  • குழந்தைகளின் தூக்க வட்டத்தை (Sleep cycle) பாதிப்படையச் செய்து உடல் உள  ரீதியான குழந்தைகளின் வளர்ச்சியை பாதிப்படயச் செய்கின்றது.
  • மற்றவர்களுடன் தொடர்பாடல் திறன் குறைவடைவதால் குழந்தையின் சமூக வளர்ச்சியில் பாதிப்பை செலுத்துகின்றது.
  • இலத்திரனியல் சாதனங்களுக்கு அடிமையாக்குதல் (Gadget Addiction) என் கற்பனை செய்ய முடியாத பிரச்சினைக்குள் குழந்தைகள் உள்வாங்கப்படுகின்றனர்.
  • உடனடி மனநிறைவு (Instant gratification) என்பது இன்னொரு வகையான பாதிப்பாகும். இது பிற்காலத்தில் மனச்சோர்வு (Depression) போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றனர்.
  • தொடர்ந்து இலத்திரனியல் சாதனங்கள் பாவிக்கும் குழந்தைகள் கூர்ந்து கவனிக்கும் திறனை (Concentration ability) இழக்கின்றனர்.


குழந்தைகளுக்கு Screen time எவ்வளவு நேரம் வழங்குவது ஆரோக்கியமானது? 


2018 AAP (American Academy of Pediatrics) Screen time guideline எமக்கு வழங்கும் தகவல் என்னவென்றால் பதினெட்டு மாதங்களுக்கு குறைவான வயதுடைய குழந்தைகளை பொறுத்தவரையில் Screen time வழங்குவது என்பது எந்த விதத்திலும் அனுமதிக்கப் படவில்லை.


2-5   வயதுடைய குழந்தைகளை பொறுத்தவரையில் Screen time ஆகக்கூடியது 1 மணித்தியாலம் வழங்க முடியும். High quality program  எனப்படும் கல்வி சம்பந்தமான விடயங்கள் பார்ப்பதற்காகவே இவை அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் போது கட்டாயமாக பெரியோர் ஒருவர் விசேடமாக பெற்றோர்களில் ஒருவர் அது சம்பந்தமாக அறிவுறுத்தல்களை வழங்க குழந்தைகளுடன் அமர்ந்திருக்க வேண்டும் என ஆலோசனை வழங்குகின்றார்கள்.



www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 27th  of February 2020

Saturday, 22 February 2020

வயதிற்கு ஏற்ற வகையில் கணிதத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தல் எவ்வாறு?




1-2 years Baby

குழந்தைகள் பொருட்களை காணும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  அதனை எண்ணி காட்டுதல்.

உதாரணமாக பூங்காவிற்கு கூட்டிச்சென்றால் அங்குள்ள ஊஞ்சல் எத்தனை உள்ளது என வினவி அதற்கான விடையை கூறுதல். அதேபோல விளையாட்டுப் பொருட்களை எண்ணுதல். 

இந்த விளையாட்டு குழந்தைகளின் முதல் இரண்டு கணிதம் கற்றலின் படிகளை பூர்த்தி செய்கின்றது.

இதன்மூலம் பொருட்களை எண்ணுவதற்கு இலக்கங்கள்  பயன்படுத்தப்படுகின்றது என்பதனையும் அதேபோல ஒவ்வொரு இலக்கத்துக்கும் சொல் அல்லது பெயர் உண்டு என்பதனையும் குழந்தை கற்றுக் கொள்கின்றது.



2-4 Years

கூழாங்கற்கள் போன்ற சிறிய பொருட்களை சேகரித்து அவற்றை 2,3,4 கற்கள்  கொண்ட வரிசை வரிசையாக அடுக்கி அவற்றை எண்ணுதல்.
இந்த வயதெல்லை குழந்தைகள் பாவிக்காத போத்தல் மூடிகள் போன்றவற்றை சேகரிப்பதில் ஆர்வம்காட்டுவார்கள். இவைகளை நாம் எண்ணுவதற்கான சந்தர்ப்பமாக ஏற்படுத்தி கொடுக்கலாம்.

இலக்கமாக பெயர் சூட்டப்பட்ட எண்ணிக்கை பொருட்களின் எண்ணிக்கைக்கு சமன் என்பதனை கற்றுக்கொள்கின்றனர்.






4 years

பத்து வரை உள்ள பொருட்களை எண்ணக்கொடுத்தல்.
மாடிப்படி ஏறும்போது எத்தனை படிகள் ஏறினீர்களென கேட்டல்.
ஒரு அறையிலுள்ள வட்டமான அல்லது சிவப்பான பொருட்களை எண்ணச் சொல்லல்.

பொருட்களின் இலக்க ஒழுங்கு மாற்றப்பட்டாலும் இருக்கக்கூடிய பொருட்களின் எண்ணிக்கை மாறாது மற்றும் வித்தியாசமான பொருட்கள் இருந்தாலும்  அவற்றை ஒரு பொருட் கூட்டமாக எண்ணப்பட முடியும் என்பதனை குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர்.



www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 22nd of February 2020.