Monday, 4 May 2020

குழந்தைகளின் திறமைகளை வளர்ப்பது எவ்வாறு?





'புத்தகம் படிப்பது படிப்பில்லை. உங்கள் குழந்தைகளின் உள்ளிலுள்ள திறமைகளை வெளிக்கொணர்வதே உண்மையான கல்வி' என்றார் சுவாமி விவேகானந்தர்.


தனது குழந்தையின் திறமையை இனங்கண்டு அதனை எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான
நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற ஆர்வம் இன்றைய  பெற்றோர்களிடம் இருந்தாலும் எல்லா குழந்தைகளினதும் தனித்துவமான திறமைகள் இலகுவில் இணங்காணப்படுவதில்லை. தனால் தனது குழந்தைகளுக்கு எந்த ஒரு திறமைகளும் இல்லையோ என அநேகமான பெற்றோர்கள் அதிருப்தியடைகின்றனர். 

இறைவனால் படைக்கப் பட்ட ஒவ்வொரு மனிதனின் திறமையும் தனித்துவமானது.ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட முடியாது. 1983களில் வாழ்ந்த உளவியலாளர் Haward Gardener Multiple intelligent concept யை எமக்கு விட்டுச்சென்றார். அவர் கூறுவது என்னவென்றால் 

''அறிவு என்பது ஒன்பது வகையானது.  Naturalistic, musical, Logical, Interpersonal, Existential, Bodily kinaesthetic, Linguistic, Intra personal, Spatial Intelligent என அவற்றை வகைப்படுத்துகின்றார். நீங்கள் ஒன்பது வகைக்கும் வாய்ப்பை உங்கள்குழந்தைகளுக்கு கொடுத்தால்எந்த intelligent  அவர்களிடம் பலம் வாய்ந்ததாக உள்ளதோ அது மிகவும் பலம் வாய்ந்ததாக விருத்தி அடையும். எந்த intelligent சாதாரணமாக அல்லது பலவீனமாக உள்ளதோ அதனையும் விருத்தி அடையச்செய்யலாம். ஆனால்  அதில் நிபுணத்துவம் அடைய முடியாது'' என்று.



ஆனால் சில நேரங்களில் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் நமது குழந்தைகளின் திறமைகளை இணங்காண முடிவதில்லை. இவ்வாறு  குழந்தையின் திறமையை உங்களால் இணங்காண முடியவில்லை என்றால் அவர்களது பலத்தை புரிந்து கொள்ள முயற்சியுங்கள் என்கின்றது உளவியல்.


திறமை என்பது செயல் திறன் சார்ந்தது அதனை ஏதாவது ஒரு விதத்தில் குழந்தையிடம் உங்களால் பார்க்க முடியும். ஆனால் பலம் என்பது ஒருவரது குணாதிசயம்.அதனை நீங்கள் 
கூர்ந்து கவனிக்கும் போதே புரிந்துகொள்ள முடியும். அது கண்ணுக்கு புலப்படக் கூடிய ஒன்றல்ல.

Researcher Lea Waters குழந்தைகளிடம் இணங்காணக்கூடிய பலத்தை பின்வரும் பிரதான குழுக்களாக பிரிக்கின்றார்
  1. Courage- தைரியம் 
  2. Humanity- மனிதநேயம் 
  3. Wisdom- ஞானம் 
  4. Sense of Justice- நீதி 
  5. Self control- சுய கட்டுப்பாடு 
  6. Ability to look beyond yourself- தனது சக்திக்கு அப்பாலான நோக்கு


உதாரணமாக அலி பாபா நிறுவனத்தின் தலைவர் Jack Ma விடம் இருந்த தைரியமே அவரை ஒரு வெற்றிபெற்ற Business manஆக்கியது. காந்தியை மஹாத்மாவாக்கியது அவரிடம் காணப்பட்ட நீதியை பேணும் சமத்துவ உணர்வே. இவர்களிடம் திறமைகள் இருந்தாலும் அது மெருகூட்டப்பட்டது அவர்களிடம் காணப்பட்ட இவ்வகையான தனித்துவமான குணாதிசயங்களே. 

உங்கள் குழந்தை சண்டை என்று வரும்போது அதனை தவிர்ந்துக் கொள்வதை விருப்புகின்றாரா? அப்போது உங்கள் குழந்தை பலவீனமானவர், கோழை என்று அர்த்தம் இல்லை. தேவையற்ற மோதல்களினால் எமது பொன்னான நேரமும் சக்தியும் வீணடிக்கப்படுகின்றது  என்று அதனை தவிர்க்கக் கூடிய ஞானமிக்கவர் என இவர்களை கூறலாம்.  இவர்கள் குழு செயற்பாடுகளில் இணங்கி நடக்கக்  கூடிய  சிறந்த தலைவர்களாக உருவெடுப்பார்கள். 

திறமையை வளர்ப்பதில் பெற்றோர்களாகிய நமது பங்களிப்பு என்ன?


1.திறமையை கண்டறிய வாய்ப்புக்களை வழங்கல்

திறமைகள் என்பது மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது என்றாலும் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர வேண்டுமென்றால் சரியான வெளிச்சூழலை உருவாக்கும்போதே அது சாத்தியமாகும். என உளவியலாளர்கள் கருதுகின்றனர்.

செய்வதற்கு ஒரு வேலை இல்லாத போது போகுவதற்கு ஒருஇடமில்லாத போது குழந்தைகள்  தமக்கு விருப்பமானதை செய்ய ஆரம்பிக்கும். எனவே குழந்தைகளை சலிப்புத்தட்ட விடும் போது (Boredom) இது சாத்தியமாகின்றது. மேலும் மூன்று மூன்று மாதங்கள் திறமைகளை வெளிக்கொணரும்  classகளுக்கு (Sports, drawing...) அவர்களது ஆர்வத்தை புரிந்துக்கொள்ள முடியும்.  இது சில உளவியலாளர்களின் கருத்து,

2.குழந்தைகளின் ஆர்வத்தை கூர்ந்து அவதானித்தல்

குழந்தையின் ஆர்வத்தை நீங்கள் புரிந்துக் கொள்ளும் போது அதனை நாம் விரும்புகின்றோம் என்பதை வார்த்தை மூலமாகமாகவோ செயல்கள் மூலமாகவோ வெளிக்காட்டி உற்சாகப்  படுத்தலாம். இதன்போது குழந்தை மீண்டும் மீண்டும் அதனை செய்ய முயற்சிக்கும்.

3.தனது குறிக்கோளை நோக்கி தொடர்ச்சியாக பயணிக்க உற்சாகத்தை ஏற்படுத்தல்

குழந்தை குறிப்பிட்ட துறையில் முயற்சி செய்யும்போது சோர்வை உணரலாம்.  தோல்விகளை எதிர்கொள்ளும்போது அதனை கைவிட முயற்சிக்கலாம். இதன் பொது தனது குறிக்கோளை நோக்கி தொடர்ச்சியாக பயணிக்க உற்சாகத்தை ஏற்படுத்தல். 

4.முறையான பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

குறிப்பிட்ட திறனில் கணிசமான நிபுணத்துவத்தை குழந்தை அடைந்ததன்பிறகு முறையான பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான வழிகளை (online or offline resources) ஏற்படுத்திக் கொடுத்தல்.

5.கற்றல் செயற்பாட்டில் ஆதிக்கத்தியோ அழுத்தத்தையோ வழங்காமல் அவர்களை பின்தொடர்தல்

குழந்தை தானாக திறனை கற்றுக்கொள்ளும் நிலையை அடைந்தவுடன் எமது பங்களிப்பை குழந்தை வேண்டும்போது மாத்திரம் வழங்கி விட்டு அவர்களின் கற்றல் செயற்பாட்டில் ஆதிக்கத்தியோ அழுத்தத்தையோ வழங்காமல் பின்தொடர்தல்





Tuesday, 28 April 2020

குழந்தைகளுக்கு தினசரி வேலைகளை அறிமுகப்படுத்தல்


குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து வீட்டு வேலைகளை அவர்களின் வயதிற்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்தல் என்பது மனரீதியான பல நன்மைகளை ஏற்படுத்துகின்றது என உளவியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால்தான் ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் பாடசாலைகளில் தமது வகுப்பறையை ஏன் மலசலக் கூடங்களை கூட தாமே சுத்தப்படுத்த கற்றுக்கொடுக்கப்படுகின்றது. இதன்மூலம் பல நன்மைகளை குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர்.


குழந்தைகளுக்கு தினசரி வேலைகளை பழக்குவதனால் ஏற்படும் நன்மைகள்


  • வீட்டிலுள்ள பொருட்கள் என்னுடையது இதனை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
  • கூர்ந்து கவனிக்கும் திறன்  விருத்தி அடைகின்றது. 

உதாரணமாக தூசு தட்டும் போது முதலில் புத்தகங்களை எடுத்து வைத்தல் பின் தூசி தட்டுதல் பின்பொருட்களை இருந்த இடத்தில் எடுத்து வைத்தல் போன்று தொடராக ஞாபகப்படுத்தி விடயங்களை செய்ய பழகுகின்றனர்.இது பிற்காலத்தில் கற்றல் நடவடிக்கைகளிலும் ஒரு தொடராகவுடன் கற்றலை  மேற்கொள்ள ஏதுவாகின்றது.
  • இரண்டு கைகளையும் பயன்படுத்தி வேலை செய்யும் போது மூளையின் இரண்டு பகுதிகளுக்கும் உண்டான திறமைகள் விருத்தி அடைய ஏதுவாகின்றது.


வயதிற்கு ஏற்ற வகையில் குழந்தைகளுக்கு வேலைகளை வழங்கும் போதே அது வினைத்திறனாக அமையும். குழந்தை உளவியலாளர் ஒருவர்  வயதிற்கு ஏற்ற வகையில் எவ்வாறு வழங்கலாம் என பின்வருமாறு விபரிக்கின்றார்.

1- 3 YEARS

ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பொறுத்த வரையில் சின்ன சின்ன வேலைகளை  ஏவுவதால் மாத்திரம் அவர்கள் குறிப்பிட்ட வேலையை செய்துவிடமாட்டார்கள்.  அவர்களுடன் நாமும் இணைந்து ஒரு விளையாட்டாக செயற்படும்போது உற்சாகமாக செயற்படுவார்கள்.

  • சாப்பிட்ட பிறகு குழந்தையின் கைகளில் Plateயை வழங்கி 'வாங்க நாம் kitchenயில்  வைப்போம்' எனக்கூறல் அவர்கள் அதனை செய்யும்போது good என கைதட்டல்.
  • கழுவிய பாத்திரங்களை குழந்தைகளின் உதவியுடன் அடுக்குதல். 
சமயலறை பாத்திரங்களின் ஒலிகளை உணர்ந்துகொள்வதன் மூலம் மொழி வளர்ச்சிற்கு உதவுகின்றது.
  • உறவினர்களின் உடைகளை அவர்களின் உதவியுடன் அப்பாவின் அம்மாவின் தம்பியினது என கூறி கூறி தரம்பிரித்து அடுக்குதல். இதன் போது குழந்தை ஒரு பொருள் எங்கு பொருந்தும் (Categorization) என்பதனை புரிந்து கொள்வதோடு இது பிற்காலத்தில் எழுத்துக்களை இலக்கங்களைமற்றும்  நிறங்களை பிரித்தறிவதற்கான அடிப்படையை வழங்குகின்றது.அப்பாவின் உடைகள் பெரியது தம்பியின் உடைகள் சிறியது போன்ற கணிதத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளும்.

2-2 1/2 வயது 
  • விளையாடி முடித்த பிறகு விளையாட்டுப் பொருட்களை ஒரு பெட்டியில் எடுத்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தல்.நாமும் சேர்ந்து ஒரு விளையாட்டாக செய்து காட்டல்.இதன் மூலம் எடுத்த பொருட்களை இருந்த இடத்தில் வைக்க வேண்டுமென்ற தகவல் மூளையில் பதியும். பாதணிகளை பாவித்த உடைகளை உரிய இடத்தில் போட வைத்தல்.

3-5 YEARS 

இது குழந்தைகள் பாடசாலை போன்ற வெளி இடங்களுக்கு சென்று வரும் பருவமாகும்பாதணிகள் புத்தகப்பை போன்றவற்றை பாடசாலை விட்டு வந்த உடன் உரிய இடத்தில் வைக்க சொல்லிக்கொடுத்தல்.

4 வயது - socks கைக்குட்டை போன்ற சிறிய உடைகளை கழுவுவதற்கு வாய்ப்பளிக்கலாம்.நாம் அதிகம் அழுக்காக்கி கொண்டு வரும்போது அவற்றைஅழுக்கு நீக்க அதிகம் சிரத்தை எடுக்க வேண்டும் என்பதனை அவர்கள் ஆரம்பத்திலிருந்து புரிந்து கொள்வார்கள்.

4-5 வயது- வீட்டிலுள்ள செல்ல பிராணிகளுக்கு உணவூட்டல், மீன்களுக்கு தீனி போடுதல், செடிகளுக்கு நீர் பாய்ச்சல் போன்றவைக்கு வாய்ப்பளிக்கலாம். இதன்மூலம் உயிரினங்கள் உயிர் வாழ உணவு நீர் அவசியம் என்பதனை புரிந்து கொள்கின்றனர்.


>5 YEARS 

நெருப்புடன் சம்பத்தப்படாத சமையல் (Fire less cooking) செய்ய பழக்கலாம்.  juice கரைத்தல் சீனி நீர் எவ்வளவு போட வேண்டும்  என்பதனை சொல்லிக்கொடுக்கலாம். Bread இற்கு  butter jam தடவுதல், ரொட்டி மாவு உருட்டுதல், Snack box pack பண்ணல் சொல்லி கொடுக்கலாம். சமையல் குழந்தைகளின் மூளை விருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் சமையலை கற்றுக் கொள்ளும் குழந்தை தான் செய்ததால் அதனை வீணாக்காமல் உண்ண கற்றுக் கொள்ளும்.


>12 YEARS
Fuse மாற்றல்சுவரில் ஆணிஅடித்தல்,வீட்டிலுள்ள வாகனத்தை பாதுகாக்கும் முறைகள்,பெட்ரோல் நிரப்பும் படிமுறைகள், Plumping வேலைகள் சொல்லி கொடுக்கலாம். 



  



Thursday, 23 April 2020

குழந்தைகளுடன் ஆதரவாக இருத்தல் என்றால் என்ன?


அனேகமான பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பதும், விரும்பிய உணவை சமைத்துக் கொடுப்பதும் ஆதரவு என நினைக்கின்றோம். நாம் வழங்கும் இவ்வகையான சடப் பொருட்களை கொண்டு  எமது ஆதரவை குழந்தைகள் புரிந்துக் கொள்வதில்லை என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.


குழந்தைகளுடன் ஆதரவாக இருத்தல் என்றால் என்ன?

  • குழந்தைகளை பாராட்டுதல்

குழந்தைகளை பாராட்டுவதை  இரண்டு வகையாக பிரிக்கலாம்.

  • குழந்தைகளை பாராட்டுதல், அவர்கள் செய்யக்கூடிய செயல்களை பாராட்டுதல்

அநேகமான நேரத்தில் குழந்தைகள் செய்யக்கூடிய தப்பான விடயங்களை பெரிதுபடுத்தும் நாம் அவர்கள் செய்யும் நல்ல விடயங்களை கண்டும் காணாதது போல் இருந்து விடுகின்றோம். இது தவறான அணுகுமுறையாகும். குழந்தைகள் தாவது ஒரு விடயத்தை செய்யும்போது அல்லது செய்ய முயற்சிக்கும்போது அதனை நன்கு அவதானித்து நேர் மறையான (Positive) வார்த்தைகள் மூலம் பாராட்டுவதே முதன்மையான ஆதரவாகும்.

உதாரணமாக  குழந்தை உறவினரின் பாரமான பையை தூக்கி உதவிசெய்வதை  அவதானித்தால், மற்றவர்களுக்கு முன்னால் இவர் மிகவும் உதவியான பிள்ளை என பாராட்டுதல். இதன்போது இரண்டு வகையான நன்மைகள் கிடைக்கின்றது

1. நாம் செய்யும் விடயங்களை எமது பெற்றோர் அவதானிக்கின்றார்கள் என்பதனை நினைத்து குழந்தை திருப்தி அடையும்.
2. குறிப்பிட்ட நல்ல செயலை தொடர்ந்து செய்வதற்ககு முயற்சி செய்யும்.

குழந்தைகளின் செயல்களை பாராட்டும் அதேவேளை, அவர்களையும் சந்தர்பங்கள் வரும்போது இடைக்கிடையே பாராட்டுதல் அவசியமாகும். உதாரணமாக நீ அழகாக உள்ளாய் என்றவாறு.

  • நமது வாழ்க்கையில் அவர்கள் பிரதான பாகம் வகிப்பவர்கள் என்பதனை வெளிப்படுத்தல்.
உதாரணமாக நீங்கள் பிறந்த பிறகுதான் நாம் சந்தோஷமாக உள்ளோம் எனக்கூறல்.



  • வீட்டில் சின்ன சின்ன முடிவுகள் எடுக்கும் போது குழந்தைகளின் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு முடிவு எடுத்தல்.
உதாரணமாக சுற்றுலா செல்ல முடிவெடுக்கும் போது அதற்கான இடத்தை தெரிவு செய்ய விடுதல். எமது முடிவுகளுக்கும் எமது பெற்றோர் மதிப்பளிக்கின்றார் என்ற உணர்வை ஏற்படுத்தும்.



  • குழந்தைகள் தவறுகள் செய்யும் போது, தோல்விகளை சந்திக்கும் போது அவர்களுக்கு பக்க பலமாக நின்று அந்த தோல்வியிலிருந்து வெளியே வருவதற்கான வழிகளை சொல்லிக் கொடுத்தல்.
உதாரணமாக குழந்தை பரீட்சையில் தோல்வி அடையும்போது அவர்களை மேலும்  மட்டம் தட்டாமல் அவர்களை உற்சாகப்படுத்தல். இந்தமாதிரி நேரங்களில் மற்றவர்கள் குழந்தைகளை கிண்டல் செய்யும்போது அவர்களுடன் ஆதரவாக இருப்பதுதான் இருப்பதிலேயே சிறந்த ஆதரவாகும்

www.drsanoosiya.blogspot.com.
23.04.2020

Monday, 20 April 2020

குழந்தைகளை சலிப்புத்தட்ட விடுவதனால் (Boredom) ஏற்படும் அற்புதமான நன்மைகள் 7


குழந்தைகள் தமக்கு ஒரு வேலையும் இல்லை, சலிப்பு தட்டுகின்றது, boring ஆக உள்ளது  எனக்கூறும் போது பெற்றோர்களாகிய நாம் ஒரு குற்ற உணர்வை உணர்கின்றோம். அவர்களின்  பொழுதை போக்குவதற்காக பல வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். Lock down காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. குழந்தை வளர்ப்பில் இது சரியான அணுகுமுறையா? என்றால், இது பிழையான செயற்பாடாகும்.

உண்மையில் குழந்தைகளுக்கு சலிப்புத்தட்ட அனுமதிக்க வேண்டும். குழந்தைகளை சலிப்புத்தட்ட விடுவதனால் (Boredom) ஏற்படும் அற்புதமான நன்மைகள் பின்வருவனவாகும். 

  • கற்பனை திறனை வளர்ப்பதோடு அவர்களது படைப்பாற்றலை வெளிக்கொணர வாய்ப்பளிக்கின்றது 


படைப்பாற்றல் திறனை குழந்தைகளுக்கு மேலோங்கச் செய்ய வேண்டுமாயின்  boredom அவசியம்.  இது குழந்தைகள் ஓய்வாக இருக்கும்போதே நடைபெறும்.


  • குழந்தைகள் தன்னை பற்றி ஆராய்வதற்கு நேரத்தை செலவழிக்க Boredom  வாய்ப்பளிக்கின்றது.

நான் யார் என்பதை புரிந்து கொள்வதற்கும்  தன்னுடைய மனது என்ன சொல்கின்றது என்பதனை ஆராய Boredom  வாய்ப்பளிக்கின்றது. 



  • கனவு காண தூண்டுகின்றது 

குழந்தைகள் கனவு காண்பது அவசியமான ஒன்றாகும். இன்று பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் யாரோ ஒருவர் தனது ஒய்வு நேரத்தில் கண்ட கனவுகளே ஆகும்.


  • மற்றவர்களின் உதவியின்றி தனிமையில் சந்தோசத்தை தேட கற்றுக்கொடுக்கின்றது 

Boredomயை அனுபவிக்கும் குழந்தைகள் சந்தோசமாக இருப்பதற்கு இன்னொருவர் தேவையில்லை என்ற கோட்பாட்டை புரிந்து கொள்கின்றனர். நான் என்னை விரும்புகின்றேன் என்னுடைய செயற்பாடுகளினால் நான் சந்தோசமாக உள்ளேன் என்ற நிலைக்கு மாறிவிடுகின்றனர்.


  • Boredom இல்லாமலாக்குவதற்கு  gadget வழங்குவது தீர்வல்ல

Gadget மேலும் மேலும் Reward centerயை  தூண்டிவிட்டு  Addiction  என்ற நிலைக்கு கொண்டுசெல்லும். 


  • வெற்றிப் பாதையில் முயற்சிக்க உதவும்.

எப்போதும்  ஏதோ ஒரு விடயத்தில் பிசியாக வைத்திருத்தல் என்பது ஆரோக்கியமான ஒன்றல்ல. இதன் போது அவர்கள் பிறரிடமிருந்து தொடர்ச்சியான தூண்டலை எதிர்பார்த்த வண்ணம் இருப்பர். இது அவர்களது சுய உற்சாகத்தை தடுத்து வெற்றிக்கான தடை கல்லாக மாறும். 

  • கெட்ட பழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதை தடுக்கின்றது 

Boredomயினால் ஏற்படும் கஷ்டத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தல் அவசியமாகும். Boredom என்பதனை சிறுவயதில் அனுபவிக்காதவர்களே தமது குறுகிய ஆசைகளுக்காக பெரியவர்களாகும் போது கெட்ட பழக்கவழக்கங்களுக்கு (Substance abuse) அடிமையாகின்றனர்.