‘ஒரு விடயத்தை ஒரு
குறிப்பிட்ட விதத்தில் ஏன் செய்ய வேண்டும்' என்ற புரிதலுடன் வளரும் குழந்தைகள் சுயகட்டுப்பாடு
உள்ளவர்களாகவும் தன்னுடைய தலை விதியை தானே தீர்மானிப்பதில் தேர்ச்சிப் பெற்றவர்களாகவும், சமூகத்தில் இணக்கப்பாடுள்ள பெரியவர்களாகவும் உருவெடுப்பார்கள்.
இவ்வாறான குழந்தைகள்
உருவாக்கப்பட வேண்டும் என்றால் பெற்றோர்கள், குழந்தைகளுடனான தொடர்பாடல் திறனை அவர்களது அறிவுக்கு தகுந்த
விதத்தில் செம்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
குழந்தையின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான ஐந்து தொடர்பாடல் வழிமுறைகள் பின்வருமாறு.
பயன்படுத்தும்
வார்த்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தல்.
அதாவது ஆங்கிலத்தில் ‘If’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘When’ என்ற வார்த்தையை பயன்படுத்தல்.
உதாரணமாக 'சோறு சாப்பிட்டால் பூங்காவிற்கு கூட்டிச்
செல்கின்றேன்.'என்று சொல்லும் போது
குழந்தை நான் சாப்பிடாவிட்டால் என்ன நடக்கும் என பரிசோதனை செய்து பார்க்கும்.
இதற்கு மாறாக 'சோறு சாப்பிடும்போது
/சாப்பிடுங்கள் நான் பூங்காவிற்கு கூட்டிச்செல்கிறேன் எனும் போது ஒரு நல்ல
பழக்கத்திற்கு தூண்டுதலை வழங்குகின்றோம்.
எப்போதும் குழந்தைகளின்
நடத்தைகளை, அவர்களிடமிருந்து வேறுபடுத்தி
வையுங்கள். ‘குழந்தைகளுகள் எப்போதும் நல்லவர்கள்.
அவர்களது நடத்தைகள் நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம்’ என்பதனை வலியுறுத்துங்கள்.
ஒழுக்கத்தின் நோக்கம் நடத்தையை சீர்படுத்துவதே குழந்தைகளை அல்ல.
ஏசுதலில் பூரணத்துவத்தை
பேணுதல்.
பூரணத்துவமாக ஏசுதல் என்றால் என்ன?
இது மூன்று பகுதிகளை
உள்ளடக்கியது.
- கெட்ட பழக்கத்தை நிறுத்துவதற்கான கட்டளை.
- அப்பழக்கத்தை நிறுத்த வேண்டியதற்கான காரணம்.
- குறிப்பிட்ட கெட்ட பழக்கத்திற்கான மாற்று வழி முறை.
உதாரணமாக எமது குழந்தை,
இன்னொரு குழந்தை வைத்திருக்கும் விளையாட்டு
பொருளை கேட்டு அந்த குழந்தையை அடிக்கும் பொது,
- அந்தகுழந்தையை அடிக்கக் கூடாது என கட்டளை பிறப்பிக்கலாம்.
- அவ்வாறு அடிக்கும்போது அந்தக் குழந்தை காயப்படும் என்ற காரணத்தை கூறலாம்.
- அடிப்பதற்கு பதிலாக அவரிடம் பொருளை தருமாறு அழகிய முறையில் வினவினால் அவர் தருவார் என்ற மாற்று வழிமுறையை கூறலாம்.
இதன் மூலம் குழந்தைகள்
ஒரு பிரச்சினை வரும்போது எவ்வாறு அணுகலாம் என்ற அனுபவக் கல்வியை கற்றுக் கொள்கின்றது. இது போன்ற
சந்தர்ப்பம் எதிர் காலத்தில் ஏற்படும் போது எமது உதவி இன்றி அதனை அணுக கற்றுக்
கொள்கின்றது.
Related article:
விதிமுறைகளை (rules) உருவாக்கும் போது அதன்
விளைவுகளையும் மற்றும் பயன்களையும் கூறுதல்.
உதாரணமாக சாப்பாட்டு
மேசையை சுத்தப்படுத்துவதற்கான நியதிகளை கற்பிக்கும் போது,
சாப்பாட்டை சாப்பிட்ட
பிறகு தட்டைகளை சமயலறைக்கு எடுத்துச்சென்று அதனை கழுவும் பாத்திரத்தினுள் இட
வேண்டும். (பெரிய குழந்தைகளின், கழுவி அதற்கான இடத்தில்
வைத்திட வேண்டும்.) அவ்வாறு செய்யும் போது தட்டைகளில் இலையான்கள் மொய்ப்பதன் மூலம்
பரவும் நோய்களை தடுக்கலாம். அதே நேரத்தில் அடுத்த சாப்பாட்டுக்கான நேரத்தின் போது
மேசையை சுத்தம் பண்ண வேண்டிய அவசியமும் இல்லை.
நேரத்துடன் போட்டியிட
உற்சாகப்படுத்தல்
எல்லாக் குழந்தைகளும்
வெற்றியை விரும்புபவர்கள். அவர்களை நேரத்துடன் போட்டியிட விடும் போது ஒரு விடயத்தை
செய்வதற்கு உற்சாகமளிப்பதுடன் அதனை விரைவாக செய்யவும் தூண்டுதலை வழங்கலாம்.
உதாரணமாக ஒரு timerயை set பண்ணி அது மணி
அடிப்பதற்குள் குறிப்பிட்ட விடயத்தை செய்யுமாறு குழந்தைகளை ஏவுதல்.
இது பெற்றோர்களின் அதிகார போராட்டம் (power
struggle) இல்லாமல் குழந்தைகளிடம்
ஒழுக்கத்தை கொண்டு வர சிறந்த வழிமுறை ஆகும். இங்கு பிள்ளைகளுக்கும்
பெற்றோர்களுக்குமான சண்டையை குறைத்து neutral
figure ற்கு அதிகாரம் வழங்கப்
படுகின்றது.
குழந்தை பருவம் என்பது பல
விருத்தி படிமுறைகளை கொண்டது. அது ஆரம்பத்தில் நடமாடாத் தெரியாத தேவைகளை மாத்திரம்
வேண்டி நிற்கும் . பின்னர் தேவைக்கு மேலதிகமாக விருப்பங்களையும்
எதிர்பார்த்தவர்களாக விருத்தி அடைகின்றார்கள். ஆகவே எமது தொடர்பாடல் திறனையும்
அவர்களுக்கு விருத்திக்கு தகுந்தாற் போல அமைத்துக் கொள்வது
இன்றியமையாததாகும்.
www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 11th of January 2020.
No comments:
Post a Comment