Thursday, 6 February 2020

குழந்தைகளுக்கு வாசிப்புத்திறனை பிறப்பிலிருந்து மேம்படுத்தல் எவ்வாறு?


குழந்தைகள் வாசிப்பதற்காக மூளையின் பல பகுதிகளை பயன்படுத்துகின்றனர். அப்பகுதிகள் குழந்தை பருவத்தில் சரியான விதத்தில் தூண்டப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் சிறந்த வாசிப்பாளிகளை உருவாக்க முடியும்.


குழந்தைகளுக்கு வாசிப்பு திறனை அறிமுகப்படுத்தமுன் விருத்தி செய்ய வேண்டிய மூன்று  திறன்கள் பின்வருமாறு

  1. புலன்களின்  விருத்தியை தூண்டுதல்
  2. தசைகளுக்குண்டான விருத்தியை தூண்டுதல்    
  3. மூளையில்  வித்தியாசத்திற்கும் ஒற்றுமைக்கும் இடையிலான  விருத்தியை ஏற்படுத்தல் 

புலன்களின்  விருத்தியை தூண்டுதல்

குழந்தை பருவத்தில் பார்வை, கேட்டல்,தொடுகை ,நுகர்ச்சி ,மற்றும் சுவை புலன்களை சரியான விதத்தில் தூண்டுவதன் மூலம் அவர்களது வாசிப்புத்திறன் பிற்காலத்தில் மெருகூட்டப் படுகின்றன என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

மூளையானது குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொரு வயதிலும் குறிப்பிட்ட புலன்களை வைத்து தனது நரம்பெண்களை விருத்தி செய்து கொள்கின்றது. இந்த விருத்தியானது பிற்காலத்தில் மொழி கற்றலுக்கான  அடிப்படையாக அமைகின்றது.

  • முதல் ஆறு மாதங்களில் குழந்தைகள் அதிகம் நாக்கையும் பின்னர் கைகளையும் பயன்படுத்துவார்கள். எனவே இந்த வயதில் குழந்தைகளுக்கு கைகளுக்கும் வாய்க்கும் நிறைய அனுபவம் கொடுக்க வேண்டும்.

  • பின்னர் பொருள்களை பிடித்து தட்டிப்பார்த்தல் அதன் மூலம் தாளத்தை உருவாக்கல் போன்ற விடயங்களில் ஈடுபடுவார்கள். Ex கரண்டியை பிடித்து மேசையில் அடித்தல்.

  • அதே போல மூளையில் மண நுகர்ச்சி கலங்களை தூண்டுவதற்காக  பல்வேறுபட்ட மணங்களை நுகர்வதற்கான வாய்ப்பை வழங்க  வேண்டும். Ex எலுமிச்சை பழம்  நுகர விடுதல்.

  • குழந்தை துப்பும் பழக்கத்தை விருத்தி செய்வதற்கு முன்னாள் (ஒன்பது மாதத்திற்கு முன்னாள்) எல்லா வகையான சுவையையும் அனுபவிக்க வாய்ப்பளிக்க வேண்டும். 

  • மேலும் நிறைய நமது குரல் கேட்கும் வாய்ப்பை வழங்குவதன் மூலம்  மூளையின் கேட்டல் பகுதியை விருத்தி செய்ய முடியும். 

இவையே மொழிக் கற்றலுக்கான அடிப்படை பயிற்சியாகும்.



தசைகளுக்குண்டான விருத்தியை தூண்டுதல்

குழந்தையின் விருத்தியை நோக்கும் போது கைகால்களிலுள்ள பெரிய தசைகள் விருத்தி அடைந்த பிற்பாடே சிறிய தசைகளான கண்ணுக்குண்டான தசைகள் விருத்தி அடைகின்றன. கண் தசைகள் விருத்தி அடைந்த பிறகே குழந்தை வாசிப்புக்கு தயாராகின்றது. எனவே வாசிப்புத்திறனை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன் கை  கால்களை பயன்படுத்தி நன்றாக தவள வாய்ப்பளிக்க வேண்டும். 

தவளாத குழந்தைகளுக்கு வாசிப்புத்திறன் தாமதமாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் நிரூபிக்கின்றன


 மூளையில்  வித்தியாசத்திற்கும் ஒற்றுமைக்கும் இடையிலான  விருத்தியை ஏற்படுத்தல் 

 குழந்தையின் புலன் விருத்தியையும் தசைகளுக்குண்டான விருத்தியையும் மேம்படுத்திய பிற்பாடு சின்ன சின்ன சமையல் பொருட்கள் இலைகள் போன்றவற்றை வழங்கி அவற்றை வேறுபிரிப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். இதன்போது குழந்தைகள் ஒரே மாதிரி பொருட்களை ஒன்று சேர்த்தல் இலைகளில் கூட வித்தியாசத்தை உணர்தல் போன்ற அனுபவங்களை பெற்றுக் கொள்கின்றனர். இது மூளை யில்  வித்தியாசத்திற்கும் ஒற்றுமைக்கும் இடையிலான வேறுபாட்டை விருத்தி செய்கின்றது. இதன் மூலம் பிற்காலத்தில் குழந்தைகள் எழுத்துக்கு இடையிலான வித்தியாசத்தை இனங்கண்டு கொள்வார்கள்.

உதாரணமாக ''B'' யிற்கும் ''D'' இடையிலான வித்தியாசம் மற்றும் ''க'' யிற்கும் ''ச'' இடையிலான வித்தியாசம். 


By ART OF PARENTING at 6th of February 2020.
  


Saturday, 1 February 2020

குழந்தைகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்தல் அவசியமா?


குழந்தைகளின் மொழிக் கற்றலில் கவனித்து பேசும் திறன் எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவு வாசிப்புத் திறனும் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகளுக்கு வாசிப்புத்திறனை மேம்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

vமொழிக்கு உண்டான  சொற்களையும் அதற்கான ஒலிகளையும்  கற்றுக் கொள்கின்றதுஇதனால் எழுத்தறிவை (Litracy skill) வளர்கின்றது.
vபுத்தகங்களின் பெறுமதியை உணர்த்துகின்றது
vகற்பனை திறனை  வளர்கின்றது.
vசமூக வளர்ச்சியையும் தொடர்பாடல் திறனையும் வளர்கின்றது.
vஉண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்த்துகின்றது.


வாசிக்கும் திறனை அறிமுகப்படுத்துவதற்கான வயதெல்லை என்ன?

ஒவ்வொரு குழந்தைகளின் விருத்தியும் தனித்துவமானது. அதே போல குழந்தைகள் வாசிக்க கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் வயதெல்லையும் ஆளுக்காள் வேறுபடும்.

பொதுவாக மூன்று வயதில் குழந்தைகள் கதைகள் கேட்டு அதனை தொடர்ந்து கேட்கும்போது அவர்களுடைய மழலை மொழியில் அதனை திரும்பிச் சொல்வதற்கு  இயலுமானவர்களாக இருப்பார்கள். கண்ணுக்கெட்டிய தூரத்தில் புத்தகங்கள் தென்படும் போது அவற்றை புரட்டிப் பார்த்து ஆராய்ச்சி செய்வார்கள்.

நான்கு வயதை எட்டிய குழந்தைகள் மிகவும் பரீட்சியமான எழுத்துக்களை  இனங்கண்டு கொள்வார்கள்.உதாரணமாக தனது பெயர், காட்சி பலகைகளிலுள்ள சொற்கள் மற்றும் பொருட்களின் லேபெல்கள் போன்றவைகளை இனங்காண்வார்கள்.

ஏறத்தாள ஐந்து வயதில் எளிமையான சொற்களை வாசிக்கக் கூடியவர்களாகவும் சிலவேளை அவற்றை எழுதக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். 



குழந்தைகள் வாசிப்பதற்காக மூளையின் பல பகுதிகளை பயன்படுத்துகின்றனர்அப்பகுதிகள் குழந்தை பருவத்தில் சரியான விதத்தில் தூண்டபடுவதன் மூலமே எதிர்காலத்தில் சிறந்த வாசிப்பாளிகளை உருவாக்க முடியும்.



By ART OF PARENTING at 2nd of February 2020.

Wednesday, 29 January 2020

குழந்தைகளுக்கு மொழியை எவ்வாறு கற்றுக் கொடுக்கலாம்?


குழந்தைகளுக்கு மொழி கற்றுக்கொடுத்தல் என்பது பெற்றோர்களை பொறுத்த வரையில் பாரிய சவாலானது.  மொழி கற்றலின் என்றால் என்ன? அதன் படி முறை என்ன? என்பவற்றை சரியாக விளங்கிக் கொண்டால் அச்சவாலை முறியடிக்கலாம் என்பது எனது நம்பிக்கை.

கற்றுக்கொள்ள கூடிய மொழியை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

புரிந்துக்கொள்ளக்கூடிய மொழி (Receptive language)

  • கவனிக்கும் திறன் (Listening) 
  •  படிக்கும்/ வாசிக்கும்  திறன் (Reading)


பேசக்கூடிய மொழி (Expressive language)

  • பேசும் திறன் (Speaking) 
  • எழுதும் திறன் (Writing)


இந்த நான்கு திறனும் விருத்தி அடையும் போதே ஒரு குழந்தை ஒரு மொழியில்  முழுமையாக தேர்ச்சி அடைந்து உள்ளது என அர்த்தம்.

குழந்தைகளுக்கு முதலில் விருத்தி செய்ய வேண்டிய திறன் கவனித்து கேட்கும் திறன் ஆகும்.இதற்காக குழந்தை அந்த மொழியை கேட்பதற்கான வாய்ப்பை அதிகம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். குழந்தை தொடர்ந்து தாய் மொழியை கேட்டுக்கொண்டு இருந்தால் இரண்டாவது மொழிக்கான வார்த்தைகள் பதிவாகாது. இதனால் அதில் சிந்தனை வளராது.


அதே நேரத்தில் குழந்தை இரண்டாவது மொழியை கேற்க ஆரம்பித்த உடன் கதைக்க ஆரம்பித்து விடும் எனவும் கூற முடியாது.

காரணம் குழந்தை ஒரு மொழியை கேட்க ஆரம்பித்த காலத்திலிருந்து கதைக்கும் வரை மூன்று  படி முறைகளை கடந்து செல்ல வேண்டும். அப்போதுதான் குழந்தையால் ஒரு மொழியில் முழுமையாக சிந்தித்து கதைக்க முடியும்.

அவதானித்து கேட்கும் நிலை


இதில் குழந்தை புது  வார்த்தைகளை மூளையில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது 3 மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை நீடிக்கலாம்.இந்த phase யில்  குழந்தை இரண்டாவது மொழியை அதிகம் கேற்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

கேட்டவற்றை பேசி பார்க்கும் நிலை


இந்த phase யில் குழந்தை சின்ன சின்ன வார்த்தைகளை பேசிப் பார்க்கும். நாம் அதற்கு சரியான மறு  மொழி வழங்கும் போது பேசும்  வார்த்தைகளின் அளவு நீண்டுச்  செல்லும்.

மொழியை ஆராய்ச்சி செய்யும் நிலை

புது மொழியை கற்கும்போது குழந்தை இந்த phaseயில் ஏற்கனவே சரியாக கற்றவற்றை தவறாக பேசி பார்ப்பார்கள். இது அந்த குழந்தை மொழியை ஆராய்ச்சி செய்கின்றது என அர்த்தம். இதை நாம் அனுமதிக்க வேண்டும். இதன் போது மூளை ஒரு சில தவறுகளை தானே உருவாக்கி அதிலிருந்து புது விடயத்தை கற்றுக் கொள்கின்றது. 

'நீ  தப்பாக பேசுகிறாய் சரியாக பேசு' என குழந்தைகளை கட்டுப் படுத்தும் போது இந்த phaseயை நிறுத்தி விடுவர். இதனால் குறிப்பிட்ட மொழியில் பாண்டித்தியம் அடைய மாட்டார்கள். அத்தோடு குறிப்பிட்ட மொழியை தயங்கி தயங்கி பேச ஆரம்பிப்பார்கள்.

எனவே சரியாக  கதைத்துக் கொண்டு இருந்த ஒரு மொழியை குழந்தை தவறாக கதைத்தால்  குழந்தைகளை ஏசாமல் நாம் அந்த வார்த்தைகளை தொடர்ந்து சரியாக  கதைக்கும் போது குழந்தையும் சில நாற்களில் சரியாக கதைக்க ஆரம்பிக்கும்.

இந்த மூன்று பகுதியும் முறையாக குழந்தை அனுபவிக்கும் போதே  மொழி கற்றலில் பேச்சுத்திறன் சரியான விதத்தில் விருத்தி அடையும்.



இதற்கு பதிலாக ஒரு குழந்தையை story telling என்ற பெயரில் குறிப்பிட்ட மொழியில் ஒரு கதையை மனப்பாடம் இடச்செய்து அதனை கதைக்க வைக்கும் போது மனப்பாடம் செய்யும் திறன் வளருமே தவிர மொழிவளர்ச்சி ஒரு போதும் விருத்தி அடைய போவதில்லை. ஒரு குழந்தையின் மனப்பாடம் செய்யும்த்திறனை வைத்து பேச்சுத் திறனை எடை போட முடியாது.

மேலும் ஒரு மொழியில் பேச்சுத்திறன் விருத்தி அடைவதற்கு முன் வாசிப்பு திறனையோ எழுதும் திறனையோ அறிமுகப் படுத்துவது என்பது ஒரு குழந்தையின் மொழி வளர்ச்சியில் ஆரோக்கியமான விடயமல்ல.

www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 29th of January 2020.







Saturday, 25 January 2020

உங்கள் குழந்தைக்கு பிற மொழி கற்றுக் கொடுத்தல் அவசியமா?


தாய் மொழி சிந்தனைக்கு உண்டான முதலாவது  மொழி என்றால் பிற மொழிகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தல் அவசியமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழலாம். இரண்டாவது மொழி கற்றலும் அவசியமான ஒன்றே.

பிற மொழி கற்பதனால் ஏற்படும் நன்மைகள்.

  1. குழந்தைகளின் ஆக்கத்திறனை (Creative skill) வளர்கின்றது. 
  2. பிரச்சனைகளை தீர்க்கும் திறன் (Problem solving skill) வளர்கின்றது.  .
  3. மற்றவர்களுடனான தொடர்பாடலை எளிதாக்குகின்றது.
  4. மூளை விருத்தியில் பங்களிப்பு செலுத்துகின்றது. (Higher test score)
  5. பிற கலாச்சாரத்தை மதித்து நடப்பதற்கு உதவுகின்றது.


இரண்டாவது மொழியை எப்போது கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற விடயத்தில் உளவியாளர்களுக்கிடையில் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன.
  • ஏழு வயதிற்குள் நிறைய மொழிகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆராய்ச்சி முடிவுகளும் உண்டு.
  • ஏழு வயது வரை ஒரு மொழி மட்டும்  கொடுக்க வேண்டும் என்ற ஆராய்ச்சி முடிவுகளும் உண்டு.

ஆனால் முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த மொழி ஆராய்ச்சிகள் எல்லாம் ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்டு பெறப்பட்ட முடிவுகளாகும். அவர்களது  மொழி  லத்தீன்யை அடிப்படையாக கொண்டது. பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம் போன்ற மொழிகளில் அர்த்தங்கள் வேறுபட்டாலும் எழுப்பப்படும் ஒலி கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது. இதனால் குழந்தைகளை பொறுத்தவரையில் இத்தகைய மொழிகளை ஒரே நேரத்தில் கற்றுக்கொள்வது இலகுவாக இருந்தது. 

ஆனால் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் நிலைமை வேறு. நாம் பரவலாக பயன்படுத்தும் மொழிகளான தமிழ், ஆங்கிலம்  போன்றவைகள் வெவ்வேறு அடிப்படை மொழிகளிலிருந்து உருவாக்கப்பட்டது. அவை பிறப்பிக்கும் ஒலிகள் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் வேறுபட்டது. இவை அனைத்தையும் ஒரு குழந்தையால் ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே.

(விதிவிலக்காக சிங்களம், தமிழ் இரண்டும் ஒரே ஒலியை பிறப்பிக்கின்றது என்பதனால் இவை இரண்டையும் ஒரே நேரத்தில் கற்பிக்கலாம் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.)



இந்த சூழ்நிலையில் இரண்டாவது மொழியை எப்போது சொல்லிக் கொடுக்கலாம்?

ஒவ்வொரு குழந்தைகளின் விருத்தி படிகளும் தனித்துவமானது. ஒரு மொழியை கற்றலுக்கான ஆயத்த நிலையும் குழந்தைக்கு குழந்தை வேறுபடும்.சரியாக இந்த வயதில்தான் குழந்தைக்கு வேற்று மொழியை கற்பிக்க வேண்டும் என சொல்ல முடியாது. 



கிட்டத்தட்ட ஆறு வயதில் எல்லா குழந்தைகளும் இரண்டாவது மொழியை கற்றுக்கொள்ள ஆயத்தமாகின்றார்கள் என்பது  ஒரு உளவியலாளரின் கருத்து. இது கவனித்து பேசுவதற்கான வயதெல்லை. எழுதுவது சம்பந்தப்பட்டதல்ல.

www.drsanoosiya.blogspot.com
By ART OF PARENTING at 25th of January 2020.


Wednesday, 22 January 2020

உங்கள் குழந்தைகளுக்கு முதலில் கற்றுக்கொடுக்க விரும்பும் மொழி எது?



ரு குழந்தையின் மொழி வளர்ச்சியானது அவர்களின் பிறப்பிலேயே ஆரம்பிக்கப்படுகின்றது. அதேநேரத்தில் ஒரு குழந்தைக்கு யாராலும் எப்படி பேச வேண்டும் என சொல்லிக்கொடுக்க முடியாது. பெற்றோர்களாகிய நாம்  சரியான சூழலை அமைத்துக் கொடுத்தால் குழந்தைகள் சுயமாக பேச ஆரம்பிப்பார்கள்.



தும்மினாலும் தன்  குழந்தை ஆங்கிலத்தில் தும்ம வேண்டும் என்ற ஆங்கில மோகத்தில் வாழும் இன்றைய நவீன  பெற்றோர்களுக்கிடையில்  உள்ள அடுத்த சவால் குழந்தைகள் பேச ஆரம்பித்தவுடன் எந்த மொழியை முதலில் அறிமுகப் படுத்துவது என்பதாகும்.

குழந்தைகளை பொறுத்த வரையில் சிந்தனைக்கு உண்டான மொழி தாய் மொழியாகவே இருத்தல் வேண்டும்.

தாய் மொழியில் சிந்தனை நன்றாக  வளர்ந்து விட்டது என்றால் அதற்கு அப்பால் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும் என ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. 
அதனால்தான் ஜப்பான், ஜெர்மனி போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் முக்கியத்துவம் முதலில் கொடுப்பது தாய் மொழிக்குத்தான்.



தாய் மொழியை முதலில் கற்றுக்கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகள பின்வருமாறு


  • குழந்தைகளின் சமூக விருத்தியில் உதவுகின்றது.



குழந்தைகளை சுற்றி வாழும் உறவினர்கள் குறிப்பாக தாத்தா பாட்டியுடன் தொடர்பாடலை மேற்கொள்ள தாய் மொழி அவசியமாகும். அவர்களுடனான உறவு மற்றும் தகவல் பரிமாற்றம் குழந்தைகளின் சமூக வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை செலுத்துகின்றது.
  • குழந்தைகள் தாய் மொழியில் சிறப்பாகவும் விரைவாகவும் கற்றுக் கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக குழந்தைகளின் critical thinking மற்றும் literacy skill விருத்தியில் உதவுகின்றது.
  • தனது அடையாளத்தை குழந்தைகள் தாய்மொழி மூலமே பிரதிநிதித்துவ படுத்துகிறார்கள். தனது மூதாதையினுடனான இணைப்பை தாய் மொழி வழங்குகின்றது.
  • குழந்தைகளால் தாய் மொழி மூலமே தனது உணர்வுகளை சரியான விதத்தில் வெளிப்படுத்த முடியும்.




ஆகவே பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளுக்கு முதலில் தாய் மொழியை கற்றுக்கொடுப்போம். தாய் மொழியில் நன்றாக சிந்தித்து ஜோக்ஸ் கூறுமளவுக்கு சிந்தனையை வெளிப்படுத்த, தனது தேவைகளை பரிமாற வழிவகுப்போம். 

By ART OF PARENTING at 23th of January 2020

Monday, 20 January 2020

உங்கள் குழந்தைகள் மீது அதிகாரத்தை பயன்படுத்துகிறீர்களா?


நான் உனது தாய்/தந்தை நான் சொல்வதை நீ கேட்டாக வேண்டும் என்ற அதிகாரத்தொனி எமது வீடுகளில் அடிக்கடி ஒலிப்பதை கேட்டிருக்கின்றோம். இது குழந்தை வளர்ப்பில் அவசியமாக தவிர்க்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஆரோக்கியமான மனித சமுதாயம் இந்த உலகத்தில் எதிர்காலத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்றால், ஆரோக்கியமான குழந்தை சமுதாயம் இன்று விதைக்க பட்டாலே உண்டு. அத்தகைய குழந்தை சமுதாயத்தை உருவாக்கும் பாரிய பொறுப்பை பெற்றோர்களின் கைகளில் வழங்கி அதற்காக கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் அவர்களிடமே எம்மை படைத்தவன் வழங்கியுள்ளான். அந்த அதிகாரமானது சரியான சமநிலையில் பயன்படுத்தப்படுவது அவசியமாகும். அதனை மிதமிஞ்சி பயன்படுத்துவதோ  பயன்படுத்தாது விடுவதோ குழந்தை வளர்ப்பில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.


குழந்தைகள் என்பவர்கள் பொம்மைகள் அல்ல. அவர்களுக்கும் தேவைகளும் உணர்ச்சிகளும் உள்ளன. ஆனால் அவற்றை சரியான விதத்தில் வெளிப்படுத்த முடியாத சிறிய மனிதர்கள்.  எமது அதிகார வலிமையை (Ego) உணர்த்துவதற்காகவோ அல்லது நான் என்ற அகங்காரத்தை தன்னிறைவு செய்வதற்காகவோ சட்டங்களை அமைத்து அதனை பின்பற்ற வேண்டும் என்ற கட்டளையை குழந்தைகளுக்கு வழங்கும் பொழுது அவர்களது உணர்ச்சிகள் அடக்கப்படுவதுடன் சிலவேளை அது கிளர்ச்சியாகும் சந்தர்ப்பங்களும் உண்டு.

இத்தகைய அடக்கு முறையை எதிர்கொள்ளும் குழந்தைகள் சமத்துவத்தை உணரமாட்டார்கள். சமத்துவத்தை உணராத குழந்தைகள் சுயமதிப்பை இழந்து விடுவார்கள்.



ஆகவே குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான சமத்துவமான கலந்துரையாடலுடன் சரியான சமநிலையில் அதிகாரங்கள் பேணப்பட்டு குடும்பத்திற்கும் சமூக கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் வீடுகளில் சட்டங்கள் அமைக்கப்படுவதன் மூலம்  சுயமதிப்புள்ள குழந்தை சமுதாயத்தை கட்டியெழுப்புவோம்.


By ART OF PARENTING at 20th of January 2020

Friday, 17 January 2020

உங்கள் குழந்தை நல்லவரா? கெட்டவரா?


ஒரு குழந்தை ஒரு விடயத்தை செய்யும் போது '' நல்ல பிள்ளை'' அல்லது ''கெட்ட பிள்ளை'' என அழைப்பது  குழந்தை வளர்ப்பில் அதிகம் காணக்கூடிய ஒன்று.  நாங்கள் விரும்பாத ஒன்றை குழந்தை செய்யும் போது நாம் கவலைப்படலாம். அதற்காக குழந்தையை நீ கெட்டவர் என அடையாளப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்.

உதாரணமாக ஒரு குழந்தை புதிதாக பூசப்பட்ட சுவரில் கீறும் போது அது உங்களுக்கு விருப்பம் இல்லாத செயலாக இருக்கலாம். அதை குழந்தை திரும்பச் செய்வதும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். இது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமல்ல என்பதனை விளக்கப்படுத்த விரும்பலாம். அதற்காக குழந்தையை கெட்ட பிள்ளை என அழைப்பது எவ்விதத்தில் நியாயம்.
நாம்  ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் எப்போதும் நல்லவர்கள் அவர்களது செயல்கள் அல்லது பழக்க வழக்கங்கள் சில போது கெட்டவையாக இருக்கலாம்.



ஒழுக்கத்தின் நோக்கம் குழந்தைகளின் நடத்தையை சீராக்குவதே. மாறாக அவர்களை ‘’கெட்டவர்கள்’’ என அடையாளப்படுத்தி அவர்களது சுயமதிப்பை காயப்படுத்துவதல்ல.



எப்போதும் குழந்தைகளின் நடத்தைகளை, அவர்களிடமிருந்து வேறுபடுத்தி வையுங்கள். குழந்தைகள் எப்போதும் நல்லவர்கள். அவர்களது நடத்தைகள் நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம்என்பதனை வலியுறுத்துங்கள். அவர்களது உள்ளார்ந்த பாத்திரத்தை இதற்குள் கொண்டுவராதீர்கள். ஒழுக்கத்தின் நோக்கம் நடத்தையை சீர்படுத்துவதே குழந்தைகளை அல்ல.

குழந்தைகளிடம் கூறுங்கள். ‘’நீங்கள் நல்லவர்கள். ஆனால் உங்களின் நடத்தை இன்று  நல்லதாக இல்லை. அவை எதிர்காலத்தில் சரியாகும் என எண்ணுகின்றேன் ‘’ என்று.


இது அவர்களது சுயமதிப்பை கூட்டி, 'நமது பெற்றோர்கள் நாம் என்ன செய்தாலும் நம்முடன் நின்று நம்மை சரியான விதத்தில் வழிநடத்துவார்கள்' என்ற எண்ணத்தை விதைக்கும்.



By ART OF PARENTING at 18th of January 202O