உலகை அச்சுறுத்திக்கொண்டு
இருக்கும் COVID-19ஆல் எமக்கு ஏற்பட்ட உடலியல் தாக்கங்களைவிட மனரீதியான தாக்கங்களே அதிகமாக
உள்ளது. இதனால் எமது கண்காணிப்பில் உள்ள குழந்தைகளும் மறைமுகமாக பாதிக்கப்படுவதை
யாராலும் மறுக்க முடியாது.
COVID-19 போராட நாமும் தயார்
என்பதற்கு நம்பிக்கையூட்டும் தகவல்கள்
- மருத்துவ வளர்ச்சியின் உச்ச காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அதற்கான சான்றுகள்
- நோய்க்கு காரணமான வைரஸ் மற்றும் அதற்கான மரபணுத்தொடரும் வெகு விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது.
- நோய் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகளும் (Testing) விரைவில் உருவாக்கப்பட்டன.
- நோய்க்கான மருந்து மற்றும் தடுப்பு மருந்துகள் (Vaccine) கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் முன்னேற்றப்பாதையில் சென்றுக்கொண்டு உள்ளன.
- China Whuhan மாநிலத்தில்தோற்றுவிக்கப்பட்ட இந்த நோயானது பாரிய அழிவை அந்நாட்டில் ஏற்படுத்தினாலும் அரசின் உடனடி நடவடிக்கைகளின் காரணமாக நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.நாளுக்குநாள் நோயினால் பாதிக்கப்பட்டோரின் தொகை குறைந்து கொண்டு செல்கின்றது
- குழந்தைகள் தொற்றுக்குள்ளானது இதுவரை <3 சதவீதமாகவே உள்ளது அவர்களுக்கு ஏற்பட்ட வீரியத்தன்மையும் குறைவே.
- WHOஆல் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு முறைகள் இலகுவில் எல்லோராலும் பின்பற்றக்கூடிய ஒன்றாக உள்ளது
- அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ளுதல்.
- இருமல் தும்மலின் போது முறையான பாதுகாப்பு முறைகளை பேணுதல்.
- தரைகளை சுத்தமாக வைத்திருத்தல்.
No comments:
Post a Comment