Friday 14 February 2020

குழந்தைகளுக்கு எழுத்துத்திறனை எவ்வாறு மேம்படுத்தலாம்?


ஒரு குழந்தை ஆக்கப்பூர்வமாக எழுத வேண்டும் என்றால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும்  தயாராக வேண்டும்.


உடல் ரீதியாக எழுதுவதற்கு தயாராகுதல் என்றால் என்ன?

ஒரு குழந்தையின் எழுத்து திறன் என்பது ஒரு விடயத்தை சிந்தித்து புரிதலுடன் எழுதுதலாகும்.  முதலில் ஒரு  எழுத்தை அது எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதனை கவனித்தல்  வேண்டும். பின் அது இயக்க தசைகளினூடாக கை  விரல்களினால் எழுதப்படல் வேண்டும். அதேநேரத்தில் அந்த எழுத்துக்கான ஒலி சேர்க்கப்படல் வேண்டும். இவை அனைத்தும் குழந்தைகளுக்கு விருத்தி அடைய குறைந்தது ஏழு வயது வரையாவது காத்திருக்க வேண்டும் என்பது உளவியலாளர்களின் கருத்து.



இவைகள் விருத்தி அடைய முன்னால் குழந்தைகளை எழுதுமாறு வற்புறுத்தும் போது இயக்க தசைகளின் போதிய விருத்தி இன்மையினால் அவர்கள் கை  வலியை  உணர்வார்கள்.

சில குழந்தைகள் சிறு வயதிலேயே பேனை பென்சிலை பிடித்து கிறுக்குவதை அவதானித்து உள்ளோம். இது அந்த குழந்தை எழுதுவதற்கு ஆயத்தமாகியுள்ளது என்று அர்த்தமல்ல. அது பெரியோர்கள் செய்வதை பார்த்து அந்த பொருளுடனான அவர்களது ஆராய்ச்சியுடன் கலந்த விளையாட்டாகும்.

கைகளை பிடித்து குழந்தைகள் எழுத வேண்டும் என்றால் முதலில் அதற்கான விரல் தசைகள் விருத்தியடைய வேண்டும்.

விரல் தசைகள் விருத்தி அடைவதற்காக குழந்தைகளுக்கான அடிப்படை பயிற்சிகள் பின்வருமாறு

மணிக்கட்டு கட்டுப்பாட்டுக்கான பயிற்சி (Wrist Control)


  • கத்தரியினால் வெட்டுதல் 
  • கடதாசியை மற்றும் புடவைகளை  மடித்தல்
  • போத்தலில் தண்ணீர் நிரப்புதல்
விரல் தசை விருத்திற்கான பயிற்சி

  • மணி கோர்க்க விடுதல்
  • பட்டன் போட விடுதல்
  • Shoe lace கட்ட விடுதல்
மூளையின் இரு பகுதிகளையும் நேர் எதிராகவும் ஒரே திசையிலும் தொழிற்பட விடுதல்

  • ஈர துணியை எதிர் எதிராக புளிய விடுதல்.
  • பாயை இரண்டு கையாளும் மடிக்க விடுதல்


குழந்தைகளுக்கு எழுத்துக்களை எவ்வாறு சொல்லிக் கொடுக்கலாம்?

உளவியலாளர்களின் கருத்துப்படி நேரடியாக கொப்பியையும் பேனாவையையும் கொடுத்து குழந்தைகளை எழுத வைப்பது ஆரோக்கியமான விடயமல்ல. மாறாக படிப்படியாக வித்தியாசமான texture யினூடாக எழுத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் போது அது குழந்தைகளின் மனதில் இலகுவாக பதிந்துவிடுகின்றது.

உதாரணமாக கைகளால் அசைத்து காற்றில் எழுத சொல்லிக் கொடுதல் (Air Writing). இதன்போது அதனை பாட்டாகவோ நடனமாகவோ மாற்றி கற்பிக்கும் போது குழந்தைகள் சுவாரஷ்யமாக கற்றுக்கொள்வார்கள். 

அதே நேரத்தில் ஒரு எழுத்தை சொல்லிக்கொடுக்கும் போது இரு பக்க  கால் கை பயன்படுத்தும் போது மூளையின் இரு பகுதிகளையும் பயன்படுத்த வாய்ப்பை வழங்குகின்றோம். உதாரணமாக வலது பக்க கையையும் இடது பக்க காலையையும் பயன்படுத்தல்.

பின்னர் இதனை Water Writing ஆக மாற்றல். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து கைகளால் எழுத்தை எழுத விடுதல்.

பின் மணலில் தண்ணீரை கலந்து அதில் எழுத விடுதல். ஒரு தட்டையை வெயிலில் வைத்து மெதுவான சூட்டில் எழுத விடுதல். துணிகளை அட்டையில் ஒட்டி அதில் எழுத விடுதல்.

இறுதியாக சீமெந்து தரையில் எழுத விட்டதன் பிற்பாடு கடதாசியை கொடுத்து எழுதவிடும் போது குழந்தை நன்றாக எழுத ஆரம்பிக்கும். கடதாசியில்  crayon ஆல் பின் பென்சிலால் எழுத விடுதல்.


இது குழந்தைகளின் கைகளுக்கு வித்தியாசமான உணர்வுகளை வழங்கி எழுத்தை இலகுவாக எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கும்.  

மனரீதியாக குழந்தைகளை எழுதுவதற்கு தயார் படுத்தல் என்றால் என்ன?


  • படிப்பதற்கான அமைதியான சூழலை உருவாக்குதல்.
  • சுவரை பார்த்தப்படி உட்காரவைத்தல்.
  • எழுதும் போது அடிக்கடி பாராட்டுதல்.
  • முழு பக்கத்தையும் ஒரே தடவையில் எழுதவிடாமல் இடை  இடையே இடைவெளி விட்டு மூளைக்கு ஓய்வு கொடுத்தல். இவ் இடைவெளியில் சின்ன சின்ன விளையாட்டுக்களை வழங்கல்.

    www.drsanoosiya.blogspot.com
    By ART OF PARENTING at 14th of February 2020.


No comments:

Post a Comment