பெற்றோர்களை பொறுத்த வரையில், குழந்தைகளுக்கு பிறப்பிலிருந்து ஒரு
மொழியை கற்றுக் கொடுப்பதில் கொடுக்கும் சிரத்தையை கணிதத்தை கற்றுக் கொடுப்பதில் எடுப்பதில்லை. காரணம் குழந்தை பருவத்தில் அவர்களால் கணிதத்தை கற்க முடியாது என்ற தப்பெண்ணமே. உண்மை அதுவல்ல. ஏனைய மொழிகளை போல கணிதத்தின் மொழியையும் குழந்தைகளால் சிறு வயதிலிருந்தே புரிந்துகொள்ள
முடியும்.
எண்களை மற்றும் கணித திறனை குழந்தைகள் ஒரு வயதில் இருந்தே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றார்கள் என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள்.
குழந்தைகள் மனிதர்களை
அவதானிப்பதன் மூலமும் தொடர்பாடல் கொள்வதன் மூலமும் ஒரு மொழியை
கற்றுக்கொள்கின்றார்கள். அதே நேரத்தில் தனது சூழலுடன் தொடர்பு வைப்பதன் மூலம் கணித மொழியை கற்றுக்கொள்கின்றனர்.
மொழி என்பது ஒருவருடன் தொடர்பாடல் கொள்ள அவசியம். ஆனால் கணிதம் உலகை அறிய அவசியம்.
முன் பள்ளி
காலத்தில் கணித மொழியின் அடிப்படை பற்றிய தன்னம்பிக்கையை
குழந்தைகளுக்கு விதைக்கும் போது பிற்காலங்களில்
கணிதம் பற்றிய பயம் உருவாகுவதை குறைக்க முடியும் என ஆராய்ச்சிகள் முன்
மொழிகின்றன.
எவ்வாறு குழந்தை ஒரு மொழியாக கணிதத்தை கற்றுக்கொள்கின்றது?
பின்வரும் ஐந்து படிமுறையினூடாக
குழந்தை கணிதத்தை கற்றுக் கொள்கின்றது என பிரபல Education consultant Dr Hari Krishna கூறுகின்றார்.
படி 1
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு
பெயரை தொடர்பு படுத்துவது போல பொருட்களை இலக்கத்துடன் தொடர்புபடுத்தல்.
படி 2
ஒவ்வொரு இலக்கத்துக்கும்
ஒன்று இரண்டு மூன்று என பெயர்
இருக்கின்றது அது ஒரு மாறாத தொடர்ச்சியாக உள்ளது.( There is sequence to names)
படி 3
இலக்கமாக பெயர்
சூட்டப்பட்ட எண்ணிக்கை பொருட்களின் எண்ணிக்கைக்கு சமானம்.
படி 4
பொருட்களின் இலக்க
ஒழுங்கு மாற்றப்பட்டாலும் இருக்கக்கூடிய பொருட்களின் எண்ணிக்கை மாறாது.
படி 5
வித்தியாசமான பொருட்கள்
இருந்தாலும் அவற்றை ஒரு பொருட் கூட்டமாக எண்ணப்பட முடியும்.
குழந்தைகளுக்கு கணித
மொழியை கற்பிக்கும் போது இந்த 5 படிகளையும்
கருத்திற்கொண்டு கற்பிக்க வேண்டும். இதில் ஒரு படியையாவது விட்டுச் செல்வது என்பது
கணிதத்தை கற்பதில் குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்படலாம்.
No comments:
Post a Comment