Monday 10 February 2020

உங்கள் குழந்தை கதைப்பதற்கு தாமதமாகின்றதா?


குழந்தைகள் பேச வேண்டும் என்றால் பேச்சை கேற்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருத்தல் வேண்டும். பேசுவதற்கான ஊக்குவிப்பு (speech stimulation) இன்மையே இன்றைய அநேகமான குழந்தைகளின் பேச்சு தாமதமாக்குவதற்கு பிரதான காரணமாக உள்ளது.



குழந்தைகளின் பேச்சு விருத்தி
  •  10 மாத குழந்தை  ‘’அம்மா’’ ‘’மம்மா’’ ‘’தட்டா’’ போன்ற அர்த்தமில்லாத சில வார்த்தைகள் பேசும். (babbling).
  • 1 -1/2 வயது குழந்தைகள் கிட்டத்தட்ட 10 வார்த்தைகள் பேசுவார்கள்.
  • நாக்குக்குண்டான தசைகள் விருத்தி அடையும் போதே பேச்சு தெளிவாகும்.
  • குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் போது முதலில் தெளிவின்மை அதாவது மழலை தன்மை இருக்கும்.
  • பொதுவாக பெண் குழந்தைகள் 5 1/2 வயது வரை அவர்களது பேச்சில் தெளிவின்மை இருக்கும். ஆனால் நிறைய விஷயங்களை பேசுவார்கள்.
  • ஆண் குழந்தைகளை பொறுத்த வரையில் வார்த்தைகளை குறைவாக பயன்படுத்துவார்கள். தெளிவாக கோர்வையாக பேசுவதற்கு 7 1/2 வயது வரை கூட தாமதிக்கலாம் என்பது  சில உளவியலாளர்களின்  கருத்து.

குழந்தைகளின் பேச்சுத் திறனை பாதிக்கும் நோயியல் காரணிகள் பின்வருமாறு

  1. கேள்விப் புலன் குறைபாடு
  2. Tongue Tie எனப்படும் நாக்கில் ஏற்படும் இயலாமை
  3. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையாக இருக்கலாம்
  4. Autism  மற்றும் Hyperactivity போன்ற disorder ஆக இருக்கலாம்

ஆனால் இன்றைய நவீன உலகை பொறுத்தவரையில் குழந்தைகளுக்கு பேச்சுக்கான ஊக்குவிப்பு (speech stimulation) குறைந்து செல்வதே பேச்சு தாமதமாக்குவதற்கு  பிரதான காரணமாக உள்ளது  


முன்னைய காலங்களில் வீடுகளில் அதிகமான நபர்கள் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். இதனால் குழந்தைகள் பேச்சை தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தது. இன்று அவ்வாறான சூழல் நமது வீடுகளில் இல்லை.

மற்றும் Gadget பாவனை குழந்தைகள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் இன்றைய காலத்தில் அதிகம் என்பதனால் அதிகம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இடையிலான நேரடி கதை தொடர்பு அருகிச்செல்கின்றது.

கைகளுக்கும்  கண்ணிற்கும்  வார்த்தைக்கும் இருக்கக் கூடிய  தொடர்பு பேச்சு வளர்ச்சியில்  முக்கியமானது. நாம் சொல்லும் விடயத்தை குழந்தை சைகைகளிலே புரிந்து கொண்டால் அவர்களுக்கு பேச வேண்டும் என்ற தேவை வராது. குறைந்த பட்ச செயலினூடாக எமக்கும் குழந்தைகளுக்கும் உள்ள தொடர்பு இருக்குமேயானால் அவர்களுக்கு பேச வேண்டிய அவசியம் வராது.

அதனால்தான் குழந்தைகளுக்கு பேச்சு வரவில்லை என்றால் சந்தைக்கு கூட்டிச்செல்லுங்கள் என்று எமது முன்னோர்கள் கூறியுள்ளனர். காரணம் அங்கு  நிறைய வார்த்தைகளை கேட்பதனால் குழந்தைகள் பேசுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.



குழந்தைகள் பேசுவதற்கான வயதெல்லை தாமதமாகும் போது பெற்றோர்களாகிய நமது பொறுப்பு என்ன?
  • Gadget பாவனையைகுழந்தைகளுக்கு இயன்றளவு குறைத்து நிறைய வார்த்தைகளை கேட்பதற்கான வாய்ப்பை வழங்கல்.

உதாரணமாக கடைகளுக்கு கூட்டிச்செல்லும் போது அது சம்பந்தமாக கதைத்துக் கொண்டு செல்லல். இங்கு குழந்தை உடனே பதில் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வார்த்தைகளை குழந்தை மூளையில் பதிவதற்கான வாய்ப்பை வழங்குவதே முக்கியமானது.
  • ஒருவிடயத்தை குழந்தையுடன் பகிரும் போது அதை ஒரு வார்த்தையுடன் முடித்து விடாமல் அதனை அதனை விளையாட்டு மைதானத்தில் Running commentary வழங்கப்படுவது  போல வழங்குதல் .

உதாரணமாக குழந்தைக்கு தக்காளியை அறிமுகப்படுத்தும் போது  ''அம்மாவை பார், நான் தக்காளி வாங்கி வந்தேன். இது சிவப்பு நிறம். இதை தண்ணீரில் கழுவுவோம். ஓ!! தண்ணீர் சில்லன்று இருக்கின்றது.'' என்றவாறு

மாறாக இது தக்காளி இதை அவ்வாறு சொன்னால் தான் நான் உனக்கு தருவேன் என வார்த்தைகளை சொல்லும் படி வற்புறுத்தும் போது குழந்தை பேசுவதையே நிறுத்திவிடும்.



By ART OF PARENTING at 10th of February 2020.


No comments:

Post a Comment