Friday 17 April 2020

துரு துரு குழந்தைகள் உருவாக்குவதற்கான உளவியல் காரணங்கள்

துரு துரு குழந்தைகள் உருவாக்குவதற்கான உளவியல் காரணங்கள்


1.போதுமான அளவு இரவு தூக்கமின்மை.

குழந்தைகளை பொறுத்தவரையில் குறைந்தது 10-12 மணித்தியால தொடர்ச்சியான இரவு தூக்கம் அவசியமாகும். இதன் போது மூளையிலுள்ள துரு துருப்புக்கு காரணமான நச்சுப் பொருட்கள் அகற்றப்பட்டு காலையில் குழந்தைகள் அமைதியான மனநிலையுடன் எழும்புவார்கள்.

2.முறையற்ற உணவு பழக்கங்கள்

Junk food மற்றும் பதப்படுத்த உணவுகளின் நுகர்வு திரும்பத்திரும்ப அந்த உணவுகளை சாப்பிட தூண்டி Addiction நிலைக்கு கொண்டுசெல்வதுடன் துரு துரு நிலைக்கும் காரணமாகின்றது .
மேலும் புரதம் மாப்பொருள் வைட்டமின் என்பன சமவிகிதத்தில் உணவுகளில் எடுக்கப்படாமையும் மாப்பொருள் சீனி சார்ந்த உணவுகளை அதிகம் உண்பதும் இதற்கு காரணமாகின்றது.

3.போதுமான அளவு உடற்பயிற்சி இன்மை

வெளி விளையாட்டுக்கள் இன்றைய சிறார்களிடம் குறைந்து செல்வதால் உள்ளக சக்தி விரயம் குறைந்து கவனச் சிதறல் அதிகமாக உள்ளது.இதனால் ஒரு விடயத்தில் குறிப்பிட்ட நேரம் மனதை ஒருநிலைப்படுத்த முடியாததனால் அவர்கள் அங்கும் இங்கும் ஓடித்திருக்கின்றனர்.
குழந்தைகளை பொறுத்தவரையில்க்குறைந்தது 90 நிமிடமாவது உடற்பயிற்சி அவசியம் என்பது உளவியலாளர்களின் கருத்தாகும்.இதன் போது உடலின் எல்லா பக்கங்களும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும் உதாரணமாக மரம் ஏறுதல் பந்து விளையாடுதல் போன்றவை

4.Gadget Addiction

விரைவாக அசையும் காட்சிகளை குழந்தைகள் தொடர்ந்து கார்ட்டூன் மற்றும் video games மூலமாக பார்ப்பதன் மூலம் விஷேடமாக முன் மூளை விருத்தி பாதிக்கப்பட்டு குழந்தைகள் துரு துரு ஆகின்றனர்.

No comments:

Post a Comment